பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
152

2

பாங்கற் கூட்டம்

2.3 உற்றதுரைத்தல்

   
உற்றதுரைத்தல் என்பது எதிர்ப்பட்டு வினாவாநின்ற பாங்கனுக்கு, நெருநலைநாட் கயிலைப்பொழிற்கட் சென்றேன்; அவ்விடத்து ஒரு சிற்றிடைச் சிறுமான்விழிக் குறத்தியால் இவ்வாறாயினேனெனத் தனக்குற்றது கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் -

21. கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
      குஞ்சரங் கோளிழைக்கும்
   பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
      தாங்கப் பணைமுலைக்கே

________________________________________________________________

நுழைந்தாயோ?; அன்றி ஏழிசை சூழல் புக்கோ-அன்றி ஏழிசையினது சூழலின்கட் புகுதலானோ; இறைவா - இறைவனே; தடவரை தோட்கு புகுந்து எய்தியது என் கொலாம் - பெரிய வரைபோலு நின்றோள்கட்கு மெலியப்புகுந்தெய்தியதென்னோ? எ-று.

   
தமிழின் றுறைகளாவன ஈண்டு அகமும் புறமுமாகிய பொருட்கூறு. ஏழிசை யாவன குரல் முதலாயின. சூழலென்றது அவற்றானியன்ற பண்ணும் பாடலு முதலாயினவற்றை. கொல்; கொலாமென வீறுதிரிந்தது; ஆம்:  அசைநிலை யெனினுமமையும், கலி-புகழான் வருமாரவாரம்; தழை த்த வெனினுமமையும், மெய்ப்பாடு: அணங்குபற்றிவந்த அச்சம். என்னை,

அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
    பிணங்கே சாலா வச்ச நான்கே.

-தொல். பொருள். மெய்ப்பட்டியல்-8.

என்றாராகலின் பயன்: தலைமகற்கு உற்றதுணர்தல்.            20

2.3.  மற்றவன் வினவ
     உற்ற துரைத்தது.

   
இதன் பொருள்: கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை-ஓந்திக்கொதுங்கிப் புறப்பட்டிரைகவராத மயில்; குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பைப் பிடித்து படம் கிழித்தாங்கு-குஞ்சரத்தைக் கோளிழைக்க வல்ல பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போல; மான் மடம் நோக்கிஅ பணை முலைக்கு தேம்பல் துடி இடை-மானின் மடநோக்குப்போலும் நோக்கையுடையாளுடைய அப்பணை