பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
154

வளம

பாங்கற் கூட்டம்

    வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
        நின்றொர்வஞ் சிம்மருங்குல்
    இளமான் விழித்ததென் றோஇன்றெம்
        மண்ண லிரங்கியதே.

22

2.5 கழற்றெதிர்மறுத்தல்

   
கழற்றெதிர்மறுத்தல் என்பது காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னும் வேட்கைவயத்தனாய்நின்று, என்னாற் காணப்பட்ட வடிவை நீ கண்டிலை;  கண்டனையாயிற் கழறாயென்று அவனொடு மறுத்துரைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

23. சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
      தில்லைச்சிற் றம்பலத்து
   மாணிக்கக் கூத்தன் வடவான்
      கயிலை மயிலைமன்னும்

_____________________________________________________________

ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை-மிடற்றின்கணுளதாகு நஞ்சை யமிர்தமாக்கிய தில்லைக் கணுளனாகிய பழையோனது கயிலையில்; வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற-வளவிய மாஞ்சோலைக்கண் வருத்துவதென்றறியாமல் நின்று; வஞ்சி மருங்குல் ஓர் இளமான் விழித்தது என்றோ எம் அண்ணல் இன்று இரங்கியது-வஞ்சிபோலு மருங்குலையுடைய தோரிளமான் விழித்ததென்றோ எம்மண்ணல் இன்றிரங்கியது! இது நின்பெருமைக்குத் தகாது எ-று. நம்மையென்றது தம்மைப் போல் வாரை. களமார்விட மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு; எள்ளல்பற்றி வந்த நகை. என்னை,

    எள்ள லிளமை பேதைமை மடனென்
    றுள்ளப் பட்ட நகைநான் கென்ப

  - தொல். பொருள். மெய்ப்பட்டியல்-4

என்றாராகலின். பயன்: கழறுதல்.

22

2.5.  ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
     வளந்தரு வெற்ப னுளந்தளர்ந் துரைத்தது.
 

    இதன் பொருள்சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லைச் சிற்றம்பலத்து-சேய்மைக்கண் விளங்கித் தோன்றாநின்ற செம்பொனா