பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
155

பூண

பாங்கற் கூட்டம்

    பூணிற் பொலிகொங்கை யாவியை
        யோவியப் பொற்கொழுந்தைக்
    காணிற் கழறலை கண்டிலை
        மென்றோட் கரும்பினையே.

23

______________________________________________________________

னியன்ற மாளிகையையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின்கணுள னாகிய; மாணிக்கம் கூத்தன் வடவான் கயிலை மயிலை- மாணிக்கம் போலுங் கூத்தனது வடக்கின்கணுண்டாகிய பெரிய கயிலைக்கண் வாழுமயிலை; மன்னும் பூணின் பொலி கொங்கை ஆவியை-பொருந்திய பூண்களாற் பொலிகின்ற கொங்கையையுடைய என்னுயிரை ; ஓவியம் பொன் கொழுந்தை காணின் கழறலை-ஓவியமாகிய பொற்கொழுந்தைக் கண்டனையாயிற் கழறாய்; மென்தோள் கரும்பினை கண்டிலை - மென்றோளையுடைய கரும்பைக் கண்டிலை எ-று.

   
மாணிக்கக்கூத்தன் என்புழி மாணிக்கத்தைக் கூத்திற் குவமையாக வுரைப்பினுமமையும், பொற்கொழுந்து-பொன்னை வண்ணமாகக் கொண்டெழுதிய கொழுந்து. மென்றோட் கரும்பினை யென்பதற்கு மெல்லிய தோளிலெழுதிய கரும்பையுடையாளை யெனினுமமையும்.

    மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்து வருத்தம் பற்றிவந்த விளிவரல். என்னை,

    மூப்பே பிணியே வருத்த மென்மையோ
    டியாப்புற வந்த விளிவர னான்கே

  - தொல். பொருள். மெய்ப்பாட்டியல்-6

என்றாராகலின். பயன்: பாங்கனை யுடம்படுவித்தல். பாங்கன் கழறவும் இவ்வகை மறுத்துரைத்தானென்பது.

23