பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
156

2

பாங்கற் கூட்டம்

2.6 கவன்றுரைத்தல் 

   
கவன்றுரைத்தல் என்பது மறுத்துரைத்து வருந்தாநிற்பக் கண்ட பாங்கன் ஒருகாலத்துங் கலங்காதவுள்ளம் இவ்வாறு கலங்குதற்குக் காரணமென்னோவெனத் தலைவனுடன் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

24. லிலங்கலைக் கால்விண்டு மேன்மே
      லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
   கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
      காய்கமழ் கொன்றைதுன்றும்
   அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
      தானரு ளில்லவர்போல்
   துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
      லுள்ளந் துயர்கின்றதே.

24

______________________________________________________________

2.6.  கொலைக்களிற் றண்ணல் குறைநயந் துரைப்பக்
     கலக்கஞ்செய் பாங்கன் கவன்று ரைத்தது.

   
இதன் பொருள்: விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட-மலைகளைக் காற்றுப்பிளந்து மேலுமேலுமிட; விண்ணும் மண்ணும் முந்நீர் கலங்கலை சென்ற அன்றும் கலங்காய்-வானுலகும் மண்ணுலகும் முந்நீராற் கலங்குதலையடைந்த விடத்துங் கலங்குந் தன்மையை யல்லை; கமழ் கொன்றை துன்றும் அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் துலங்கலை சென்று-கமழாநின்ற கொன்றைப்பூ நெருங்கிய மாலையை முடிமாலையாகச் சுற்றிய சிற்றம்பலத்தானது அருளையுடையரல்லதாரைப் போலத் துளங்குதலையடைந்து; வள்ளல் உள்ளம்; துயர்கின்றது இது என்னோ-வள்ளலே, நினதுள்ளந் துயர்கின்றது இஃதென்னோ!  எ-று.

   
விண்டென்பது பிளந்தென்பது போலச் செய்வதன் றொழிற்குஞ் செய்விப்பதன்றொழிற்கும் பொது. இவனது கலக்கத்திற்குக் காரணமாய் அதற்கு முன்னிகழ்தனோக்கிச் சென்ற வன்றுமென இறந்தகாலத்தாற் கூறினான். வள்ளலென்பது : ஈண்டு முன்னிலைக் கண்வந்தது. இதென்னோவென்பது வினாவுதல் கருதாது அவனது கவற்சியை விளக்கிநின்றது. கலக்கஞ் செய்பாங்கன்-கலங்கிய பாங்கன்; தலைமகனைக் கலக்கிய பாங்கனெனினுமமையும், மெய்ப்