பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
164

பாங்கற் கூட்டம்

விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
        லாந்தில்லை யீசன்வெற்பில் 
    தடங்கார் தருபெரு வான்பொழில்
        நீழலந் தண்புனத்தே.

31

2.14 குறிவழிக்காண்டல்

குறிவழிக்காண்டல் என்பது குறிவழிச்சென்ற பாங்கன் தன்னை அவள் காணாமல் தானவளைக் காண்பதோரணிமைக் கணின்று, அவன் சொன்ன இடமும் இதுவே;  இயலும் இவையே: இவளும் அவளே யென்று ஐயமறத் தெளியக்காணாநிற்றல். அதற்குச் செய்யுள் -

32. வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
      இடையிது வாய்பவளந்
   துடிக்கின்ற வரவெற்பன் சொற்பரி
      சேயான் றொடர்ந்துவிடா

_____________________________________________________________

மிகவும் பெரிய பொழிலி னீழலையுடைய குளிர்ந்த புனத்தின்கண் மேவுமோ மேவாளோ? எ-று.

கொடுங்காலெனச் சந்தநோக்கித் திரியாது நின்றது. கொடுங் காலுமென வெண்ணினுமமையும். நடுங்க நுடங்குமென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய் நடுக்குமென்னும் பொருள் பட்டு இரண்டாவதற்கு முடிபாயின. ஐகாரம்: அசைநிலையெனினுமமையும். தருவென்பது ஒருவமைவாய்பாடு. தடங்கார் தருபெருவான் பொழிலென்பதற்குக் கார்தங்கும் பொழி லெனினுமமையும் நிறை-ஐம்பொறிகளையுமடக்குதல். மெய்ப்பாடு: பெருமிதஞ் சார்ந்த மருட்கை. பயன்: உசாவியுணர்தல். 31

2.14.  குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
     தளிர்புரை மெல்லடித் தையலைக் கண்டது.


   
இதன் பொருள்:  வடிக்கண் இவை-அவன்கூறிய வடுவகிர் போலுங்கண்களும் இவையே: வஞ்சி அஞ்சும் இடை இது-வஞ்சிக் கொம்பஞ்சு மிடையும் இதுவே; வெற்பன் சொற்பரிசே-வெற்பன் சொற்பரிசே; வாய் பவளம் துடிக்கின்ற வா-வாய் பவளந் துடித்தாற் போலத் துடிக்கின்றவாறென்! அதனால்-யான் தொடர்ந்து விடா அடிச் சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல்