த
பாங்கற் கூட்டம்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே.
46
2.29 ஆயத்துய்த்தல்
ஆயத் துய்த்தல் என்பது இன்றியமையாமை
கூறிப் பிரியலுறாநின்றவன், இனிப் பலசொல்லி யென்னை? என்னுயிர் நினக்கடிமையாயிற்று; இனிச்சென்று
நின்னாயத்திடைச் சேர்வாயாக வெனத் தன் பிரிவின்மை கூறித் தலைமகளை ஆயத்துச் செலுத்தாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
47. சூளா மணியும்பர்க் காயவன்
சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென்னாருயிர்
ஆரமிழ் தேயணங்கே
_____________________________________________________________
2.29.
தேங்கமழ் சிலம்பன்
பாங்கிற் கூட்டியது.
இதன் பொருள்: உம்பர்க்குச்
சூளாமணி ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு என் ஆர் உயிர் ஆளாயொழிந்தது - வானவர்க்கு
முடிமணியாயவனது சூழ்ந்த பொழிலையுடைய தில்லையையொக்கும் நினக்கு எனதாருயிர் அடிமையாயிற்று; பல
சொல்லி என்னை - ஆதலாற் பலசொல்லிப் பெறுவதென்! ஆர் அமிழ்தே - நிறைந்த வமிர்தே; அணங்கே-அணங்கே;
தோளா மணியே - துளைக்கப்படாத மாணிக்கமே; பிணையே-மான்பிணையே-துன்னும் ஆர் நாள் மலர்ப்
பொழில்வாய் எழில் ஆயம் நணுகுக; நீ பலகாலுஞ் சேர்ந்து விளையாடும் நிறைந்த நாண்மலரையுடைய
பொழிற்கண் விளையாடும் அழகிய ஆயத்தை இனிச் சேர்வாயாக எ-று.
அடுக்கிய விளிகளாற் காதற்சிறப்பு
விளங்கும், பலசொல்லி யென்னையென்றது உயிர் நினக்கு ஆளாகியபின் வேறுபல சொல்லுதல் பயனில
கூறலன்றே யென்றவாறு. சொல்லியென்னும் வினையெச்சத்திற்குப் பெறுவதென ஒருசொல் வருவித்துரைக்கப்
|