New Page 1
பாங்கற் கூட்டம்
தோளா மணியே பிணையே
பலசொல்லி யென்னை
துன்னும்
நாளார் மலர்ப்பொழில்
வாயெழி
லாயம் நணுகுகவே.
47
2.30 நின்றுவருந்தல்
நின்றுவருந்தல் என்பது தலைமகளை
ஆயத்துய்த்துத் தான் அவ்விடத்தே நின்று அப்புனத்தியல்பு கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
48. பொய்யுடை யார்க்கரன்போலக
லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
_____________________________________________________________
பட்டது. பொழில்வாய் நணுகுகவென
இயைப்பினு மமையும், மெய்ப்பாடு; பெருமிதம். பயன்; பிரியலுறுந் தலைமகன் வற்புறுத்தல்.
47
2.30. பாங்கிற் கூட்டிப் பதிவயிற்
பெயர்வோன்
நீங்கற் கருமை நின்று நினைந்தது.
இதன் பொருள் : மை
உடை வாள்கண் மணி உடைப் பூண்முலை வாள் நுதல் - மையையுடைய வாள்போலுங் கண்ணையும் மணியையுடைய
பூணணிந்த முலையையுமுடைய வாணுதல்; வான் பைஉடை வாள் அரவத்து அல்குல்-பெரிய படத்தை யுடைத்தாகிய
ஒளியையுடைய அரவுபோலும் அல்குலையுடையாள்; காக்கும் பூம் பைம்புனம்-அவள் காக்கும் பூக்களையுடைய
பசிய புனம்-அகன்றால்; தன்னை யானகன்றால்-பொய் உடையார்க்கு அரன் போல் அகலும்-பொய்யையுடையவர்க்கு
அரன்றுன்பத்தைச் செய்து சேயனாமாறுபோல மிக்க துயரத்தைச்செய்து எனக்குச்சேய்த்தாம்; புணரின்-அணைந்தால்; மெய்
உடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் - மெய்யையுடையவர்க்கு அவனது அம்பலம் பேரின்பத்தைச்
செய்து அணித்தாமாறுபோலக் கழியுவகைசெய்து எனக்கு மிகவும் அணித்தாம். ஆதலான் நீங்குதல் பெரிதும்
அரிது. எ-று.
|