ம
இடந்தலைப்பாடு
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை
வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.
49
_______________________________________________________________
நெறியாகிய இவ்வொழுக்கத்தைத்
தந்ததாகிய தெய்வம் இன்னும் இருந்தது; அது முடிக்கும், அதனான்; நெஞ்சே - நெஞ்சமே; வருந்தல் -
வருந்தாதொழி; மின் எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன்தில்லை முந்நீர்-மின்னை வெல்கின்ற
சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடற்றிரை; பொன் எறிவார்
துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச் சென்றும்-பொன்னைக் கொணர்ந்து எறிகின்ற நெடிய துறையிடத்து
மின்னையுடைய முகிலைத்தோயும் பொழிற்கட் செல்லுதும்
எ-று.
இன்னும் இருந்தன்று எனக்கூட்டி
முயன்றால் என்னும் வினையெச்சத்திற்கு முடிக்குமென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது.
மின்போலும் நெறித்த சடையெனினும் அமையும். கரையிற் பொன்னைத் திரையெறியும் துறையெனினும்
அமையும், இருந்தின்று என்பது பாடமாயின், இருந்தின்றோவென ஓகாரம் வருவித்து இருந்ததில்லையோ
என உரைக்க, மெய்ப்பாடு : பெருமிதம்.
பயன் :
இடந்தலைப்படுதல். (இடத்திலே எதிர்ப்படுதல்; தலைவன் முன்னாட் கூடின இடத்திலே வந்து தலைவியை
எதிர்ப்படுதல்)
இதற்கு மின்னிடைமெலிதன் முதலாக
நின்று வருந்தல் ஈறாக வருங்கிளவி எல்லாம் எடுத்துரைத்துக்கொள்க. என்னை, இவ்விரண்டனுள்ளும்
ஒன்றே நிகழுமாகலின்.
49
இடந்தலைப்பாடு முற்றிற்று.
|