பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
187

4

மதியுடம் படுத்தல்


4.2 குறையுறத்துணிதல்

   
குறையுறத் துணிதல் என்பது பாங்கியை நினைந்து செல்லா நின்றவன் தெய்வத்தினருளால் அவ்விருவரும் ஓரிடத்தெதிர் நிற்பக்கண்டு. இவள் இவட்குச் சிறந்தாள்; இனியென்குறையுள்ளது சொல்லுவேனெனத் தன்குறை கூறத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

51. குவளைக் கருங்கட் கொடியே
        ரிடையிக் கொடிகடைக்கண்
   உவளைத் தனதுயி ரென்றது
        தன்னோ டுவமையில்லா
   தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
        பலத்தா னருளிலர்போல்
   துவளத் தலைவந்த இன்னலின்
        னேயினிச் சொல்லுவனே.

51

____________________________________________________________

4.2. ஓரிடத் தவரை யொருங்கு கண்டுதன்
     பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.


   
இதன் பொருள்: குவளை கருங் கண் கொடி ஏர் இடை இக் கொடி கடைக்கண்-குவளைப்பூப்போலுங் கரியகண்ணினையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது கடைக்கண்; உவளைத் தனது உயிர் என்றது-உவளைத் தன்னுடைய வுயிரென்று சொல்லிற்று, அதனால் ; தன்னோடு உவமை இல்லாதவளைத் தன் பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் துவளத் தலைவந்த இன்னல்-தனக்கொப்பில்லாதவளைத் தன்னொரு கூற்றின்கண் வைத்த சிற்றம்பலத்தானது அருளையுடைய ரல்லாதாரைப் போல் யான் வருந்தும்வண்ணம் என்னிடத்து வந்த இன்னாமையை; இனி இன்னே சொல்லுவன் - இவட்கு இனி இப்பொழுதே சொல்லுவேன் எ-று.
       
   
கடைக்கணுவளை யுயிரென்றது எனக்கிவ்விடர் செய்த கடைக்கண் இடர் நீந்தும் வாயிலுந் தானே கூறிற்றென்றவாறு. இன்னேயென்பது இவர்கூடிய இப்பொழுதே என்றவாறு. இனியென்றது இவளிவட் கின்றியமையாமை யறிந்தபின் னென்பது