பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
191

கலம

மதியுடம் படுத்தல்

    கலம்பணி கொண்டிடம் அம்பலங்
        கொண்டவன் கார்க்கயிலைச்
    சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
        குரைமின்கள் சென்னெறியே.

54

4.6 பதிவினாதல்

   
பதி வினாதல் என்பது மாறுபடநின்று வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை எதிர்முகமாகநின்று, வழிகூறீராயின் நும்பதி கூறுதல் பழியன்றே; அது கூறுவீராமினென்று அவர்பதி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

55. ஒருங்கட மூவெயி லொற்றைக்
        கணைகொள்சிற் றம்பலவன்
   கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
        கரியுரித் தோன்கயிலை

______________________________________________________________

அணிகலம் பாம்பாகக் கொண்டு அம்பலத்தை இடமாகக் கொண்டவன்; கார்க்கயிலைச் சிலம்பு அணி கொண்ட நும் சீறூர்க்குச் செல் நெறி உரைமின்கள் - அவனது முகில்களையுடைய கயிலைக்கட் சிலம்பழகு பெற்ற நுமது சிறியவூர்க்குச் செல்லு நெறியை உரைமின் எ-று.

    கொண்டுகொடுத்தோனென இயைப்பாருமுளர். தனக்குத் தக்க தையலை இடத்து வைத்தானென்றுந் தன்னடியார்க்குத் தகாத என்னை அவர்க்குக் கொடுத்தானென்றும், அணிதற்குத் தகாத பாம்பை அணிந்தானென்றும், தனக்குத் தகுமம்பலத்தை இடமாகக் கொண்டானென்றும் மாறுபாட்டொழுக்கங் கூறியவாறாம். கருத்து வேறறிய-வினாயதற்கு மறுமொழி பெறாது பின்னுமொன்றை வினவுதலான் இவன்கருத்து வேறென்று தோழியறிய. சின்னெறி யென்று பாடமாயின், சிறியநெறி யென்றுரைக்க. சின்னெறியென்பது அந்நிலத்துப் பண்பு.

54

4.6.  பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து
     மதியுடம் படுக்க மன்னன் வலிந்தது.

   
இதன் பொருள்: மூவெயில் ஒருங்கு அட ஒற்றைக் கணைகொள் சிற்றம்பலவன் - மூவெயிலையும் ஒருங்கே அடவேண்டித்