4
மதியுடம் படுத்தல்
4.8 மொழிபெறாதுகூறல்
மொழிபெறாது கூறல் என்பது பெயர்வினாவவும்
வாய் திறவாமையின், இப்புனத்தார் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு வாய்திறவாமையை விரதமாகவுடையராதல்,
அதுவன்றி வாய்திறக்கின் மணிசிந்து மென்பதனைச் சரதமாக வுடையராதல், இவ் விரண்டனு ளொன்று
தப்பாதென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் -
57. இரத முடைய நடமாட்
டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.
57
_______________________________________________________________
4.8. தேமொ ழியவர்
வாய்மொழி பெறாது
மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.
இதன் பொருள் : இரதம்
உடைய நடம் ஆட்டு உடையவர்-இனிமையையுடைய கூத்தாட்டையுடையவர்; எம் உடையர் - எம்முடைய தலைவர்;
வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இப்புனத்தார் விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர் -
அவரது வரதமுடைய அழகிய தில்லையையொப்பாராகிய இப்புனத்துநின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க
விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையர்; அது அன்றேல்-அதுவன்றாயின்; மீட்டு வாய்திறக்கின்
சலக்கு என்ப மணி சரதம் உடையர்-பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாகவுடையர்
எ-று.
இரதமென்றது நாட்டியச்சுவையையன்று,
கட்கினிமையை. நடமென்றது நாட்டியத்தையன்று, கூத்தென்னும் பொதுமையை. மீட்டென்பது பிறிதுமொன்றுண்
டென்பதுபட வினைமாற்றாய் நிற்பதோரிடைச்சொல். இவையாறற்கும் மெய்ப்பாடு: இனிவரலைச் சார்ந்த
பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தல்.
57
|