4
மதியுடம் படுத்தல்
4.9 கருத்தறிவித்தல்
கருத்தறிவித்தல் என்பது நீயிர்
வாய்திறவாமைக்குக் காரணமுடையீர்; அது கிடக்க, இத்தழை நும் மல்குற்குத் தகுமாயின் அணிவீராமினெனத்
தழைகாட்டிநின்று தன்கருத்தை அறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள்-
58. வின்னிற வாணுதல் வேனிறக்
கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
மணிநிறப் பூந்தழையே.
59
_______________________________________________________________
4.9. உரைத்த துரையாது
கருத்தறி வித்தது.
இதன் பொருள்: வில் நிற
வாள் நுதல் வேல் நிற கண் மெல்லியலை-வில்லினியல்பையுடைய வாணுதலையும் வேலினியல்பையுடைய கண்களையுமுடைய
மெல்லியலை; மல்லல் தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன் தனது அம்பலம்போல் - அழகை யுடைய
தன்றிருமேனியொன்றின் கண் இருத்திநின்றவனது அம்பலத்தை யொக்கும்; மின் நிற நுண் இடைப் பேர்
எழில் வெள்நகைப் பைந்தொடியீர்-மின்னினியல்பையுடைய நுண்ணிய இடையையும் பெரிய வெழிலையும்
வெள்ளிய முறுவலையுமுடைய பைந்தொடியீர்; மணி நிற பூந் தழை பொன் நிற அல்குலுக்கு ஆமோ-மணியினது
நிறத்தையுடைய இப்பூந்தழை நும் பொன்னிற அல்குலுக்குத் தகுமோ? தகுமாயின் அணிவீராமின் எ-று.
பொன்னிறத்திற்கு மணிநிறம்
பொருத்தமுடைத்தென்பது கருத்து. பொன்னிறவல்குலென்று அல்குலின்றன்மை கூறியவதனான், முன்னமே
புணர்ச்சி நிகழ்ந்தமையு முண்டென்பது கூறியவாறாயிற்று. ஆமோவென்ற ஓகாரம் கொடுப்பாரதுண் மகிழ்ச்சியையும்
கொள்வாரது தலைமையையும் விளக்கி நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை.
58
|