பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
198

5

5. இருவருமுள்வழி அவன்வரவுணர்தல்

இருவருமுள்வழியவன்வரவுணர்தல் என்பது தலைமகளுந் தோழியுமுள் வழிச்சென்று, தலைமகன் கரந்தமொழியாற்றன்கருத்து அறிவிக்கத் தோழி அவனினைவறியாநிற்றல். அதுவருமாறு-

ஐய நாட லாங்கவை யிரண்டு
    மையறு தோழி யவன்வர வுணர்தல்.

- திருக்கோவை நெறிவிளக்கம்

5.1. ஐயுறுதல்

   
ஐயுறுதல் என்பது தலைமகன் தழைகொண்டுநின்று கரந்த மொழியாற் றன்கருத்தறிவிக்க, மேனியொளியிலனாய் இப்புனத்தினின்றும் போகாது யானையோடு ஏனம் (மான்) வினாவி இவ்வாறு பொய்கூறாநின்ற இவன் யாவனோ எனத் தோழி அவனை ஐயுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

60. பல்லில னாகப் பகலைவென்
        றோன்தில்லை பாடலர்போல்
   எல்லிலன் நாகத்தொ டேனம்
        வினாவிவன் யாவன்கொலாம்

_________________________________________________

    இருவருமள்வழி அவன்வரவுணர்தல் - இதன் பொருள்; ஐயுறுதல், அறிவுநாடல் எனவிவையிரண்டும் இருவருமுள்வழி அவன் வரவுணர்தலாம் எ-று. அவற்றுள்-

5.1. அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித்
   
தையற் பாங்கி ஐய முற்றது.

   
இதன் பொருள்; பல் இலன் ஆகப் பகலை வென்றோன் தில்லை பாடலர்போல் எல் இலன் - பல்லிலனாம்வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல ஒளியையுடையனல்லன்; வினா நாகத்தொடு ஏனம் - ஆயினும் வினாவப்படுகின்றன யானையும் ஏனமுமாயிருந்தன; வில் இலன் - வில்லையுடைய னல்லன்; கையில் நாகத் தழை-கையின் நாக மரத்தின்றழை களாயினும்; கொண்டாட்டம் வேட்டை-கொண்டாடப் படுகின்றது;