பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
199

இருவருமுள்வழி அவன் வரவுணர்தல்

    வில்லிலன் நாகத் தழைகையில்
        வேட்டைகொண் டாட்டமெய்யோர்
    சொல்லில னாகற்ற வாகட
        வானிச் சுனைப்புனமே.

60

5. 2 அறிவுநாடல்

   
அறிவு நாடல் என்பது இவன் யாவனோவென் றையுறா நின்ற தோழி பேராராய்ச்சியளாதலின், அவன் கூறியவழியே நாடாதுவந்து தங்களிடைக்கே முடிதலின், இவ்வையர்வார்த்தை இருந்த வாற்றான் ஆழமுடைத்தாயிருந்த தென்று அவனினை வறியா நிற்றல். அதற்குச் செய்யுள்- 

61. ஆழமன் னோவுடைத் திவ்வையர்
        வார்த்தை யனங்கன்நைந்து
   வீழமுன் னோக்கிய வம்பலத்
        தான்வெற்பி னிப்புனத்தே

_____________________________________________________________

வேட்டை-மெய் ஓர் சொல் இலன்; கண்டவாற்றான் மெய்யாயிருப்பதொரு சொல்லையு முடையனல்லன்-கற்ற வா ஆ; இவன் பொய்யுரைப்பக் கற்றவாறு என்! பொய்யுரைத்து வறிது போவானுமல்லன்-இச் சுனை புனம் கடவான்; ஈண்டொரு குறையுடையான்போல இச்சுனைப் புனத்தைக் கடவான்-இவன் யாவன் கொலாம்; இவன்யாவனோ? எ-று.

    வினா வென்பது; ஆகுபெயர். ஆ; வியப்பின்கட்குறிப்பு. எல்லியன் ஆகத்தென்று பாடமோதி, ஆகத்தொளியில னெனவுரைப் பாருமுளர். வினாய் என்பது பாடமாயின், வாராநின்ற வென ஒருசொல்வருவித்து முடிக்க, வினாய்க் கடவானென்று, கூட்டுவாருமுளர். தையல்-புனையப்படுதல். மெய்ப்பாடு; மருட்கை. பயன்; உசாவி ஐயம் தீர்தல். 60

5.2.  வெற்பன் வினாய சொற்பத நோக்கி
     நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது.


   
இதன் பொருள்: முன் அநங்கன் நைந்து வீழ நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்து-முற்காலத்து அனங்கன்