பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
200

New Page 1

இருவருமுள்வழி அவன் வரவுணர்தல்

    வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
        வாய்ப்பின்னும் மென்றழையாய்
    மாழைமென் னோக்கி யிடையாய்க்
        கழிந்தது வந்துவந்தே.

61

_______________________________________________________________

அழிந்து பொடியாய்வீழ நோக்கிய அம்பலத்தானது வெற்பின் இப்புனத்தின் கண்ணே கூறுவது; முன் வேழமாய் - முன் வேழமாய்; கலையாய் - பின் கலையாய்; பிறவாய்-பின் வேறுசிலவாய்; பின்னும் மெல் தழையாய் - பின்னும் மெல்லிய தழையாய்; வந்து வந்து-வந்து வந்து; மாழை மெல் நோக்கி இடையாய்க் கழிந்தது - முடிவிற் பேதைமையையுடைய மெல்லிய நோக்கத்தையுடையாளது இடையாய்விட்டது; இவ்வையர் வார்த்தை ஆழம் உடைத்து - அதனான் இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான் ஆழமுடைத்து எ-று.

    மன்னும் ஓவும்: அசைநிலை. இப்புனத்தேயென்றது இவளிருந்தபுனத்தே யென்றவாறு. மெல்லிய நோக்கத்தையுடையாள் இடைபோலப் பொய்யாய்விட்ட தென்பாருமுளர். பின்னுமென்றது முன்னை வினாவே ஐயந்தாராநிற்பப் பின்னுமொன்று கூறினானென்பதுபட நின்றது. தன்கண்வந்து முடிதலின் வந்து வந்தென்றாள். சொற்பதம்-சொல்லளவு. அறிவு நாடியது-அறிவானாடி யது. மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன்: ஐயந்தீர்தல்.

61

இருவருமுள்வழி அவன்வரவுணர்தல் முற்றிற்று.