இதன் பொருள் : பிழைகொண்டு
ஒருவிக் கெடாது ஒருவன் அன்பு செய்யின் - பிழைத்தலைப் பொருந்தித் தன்கட் செல்லாது நீங்கி
இவ்வாறு கெடாதே ஒருவன் அன்புசெய்யுமாயின்; பிறவி என்னும் முழை கொண்டு செல்லாமை - அவன் பிறவியென்னாநின்ற
பாழி யையடைந்து செல்லாத வண்ணம்; அம்பலத்து நின்று ஆடும் முன்னோன் - அம்பலத்தின்கணின்றாடும்
எல்லாப்பொருட்கும் முன்னாயவனது; உழைகொண்டு - உழைமானை மருணோக்கத் தாலொத்து; இரு நோக்கம்
ஒருங்கு பயின்ற எம் ஒண்ணுதல் - வெள்ளை நோக்கமும் அவ்வுழைக்கில்லாத கள்ளநோக்கமுமாகிய
இருநோக்கத்தையும் ஒருங்கே செய்யக்கற்ற எம்முடைய ஒண்ணுதல்; மாந் தழைகொண்டு ஒருவன் என்னா
முன்னம் - மாந்தழையைக் கொண்டொருவனென்று சொல்லுவதன் முன்; உள்ளம் தழைத்திடும் - உள்ளந்
தழையாநின்றாள். அதனால் இவள் குறிப்பு இவன் கண்ணதேபோலும் எ-று.