8
நாண நாட்டம்
8.3 சுனையாடல் கூறிநகைத்தல்
சுனையாடல் கூறி நகைத்தல் என்பது வேறுபடுத்துக்கூற நாணல்கண்டு, சுனையாடினால் இவ்வாறு அழிந்தழியாத
குங்குமமும் அளகத்தப்பிய தாதும் இந்நிறமுந்தருமாயின் யானுஞ் சுனையாடிக் காண்பேனெனத் தோழி
தலைமகளோடு நகையாடாநிற்றல். அதற்குச் செய்யுள்-
69. செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற
மேனிநின் கொங்கையி
லங்கழி
குங்குமமும்
மைந்நிற
வார்குழல் மாலையுந் தாதும்
வளாய்மதஞ்சேர் இந்நிற
மும்பெறின் யானுங்
குடைவ னிருஞ்சுனையே.
69
___________________________________________________
இணங்கு ஆகும்-நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக எ-று.
இன்: அல்வழிச் சாரியை. மலயத்திக் குன்றமென்று இயைப்பாருமுளர். 68
8.3. மாண நாட்டிய
வார்குழற் பேதையை
நாண நாட்டி நகை செய்தது.
இதன் பொருள்: செந்
நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம்போல் - செய்ய நிறத்தையுடைய மேனிக்கண்
வெள்ளிய நீற்றை அணிவோனது தில்லை யம்பலத்தையொக்கும்; அம் நிறமேனி நின் கொங்கையில்
அங்கு அழி குங்குமமும் - அழகிய நிறத்தையுடைத்தாகிய மேனியையுடைய நின்னுடைய கொங்கைகளில் அவ்விடத்தழிந்த
குங்குமத்தையும்; மைநிற வார்குழல் மாலையும் - மையைப் போலு நிறத்தையுடைய நெடிய குழலின் மாலையையும்;
தாதும் - அளகத்தப்பிய தாதையும்; வளாய் மதம் சேர் இந் நிறமும் பெறின் - மேனிமுழுதையுஞ் சூழ்ந்து
மதத்தைச் சேர்ந்த இந் நிறத்தையும் பெறுவேனாயின்; இருஞ் சுனை யானும் குடைவன்-நீ குடைந்த பெரிய
சுனையை யானுங்குடைவேன் எ-று.
|