8
நாண நாட்டம்
8.4 புணர்ச்சியுரைத்தல்
புணர்ச்சி யுரைத்தல் என்பது
சுனையாடல் கூறி நகையாடா நின்ற தோழி, அதுகிடக்க நீயாடிய அப்பெரிய சுனைதான் கண்சிவப்ப
வாய்விளர்ப்ப அளிதொடரும் வரைமலரைச் சூட்டவற்றோ சொல்வாயாகவெனப் புணர்ச்சி உரையாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
70. பருங்கண் கவர்கொலை வேழப்
படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை
யம்பலத்
தோன்தட மால்வரைவாய்க்
____________________________________________________________
அம்பலம்போன்மேனியெனவியையும்.
அங்கழிகுங்குமமென்றது முயக்கத்தான் அழியும் அவ்விடத்தழிந்த குங்குமம் என்றவாறு. மைந்நிறவார்
குழற்கண் மாலையுந் தாதும் வளாவ இதனையும் இதனையும் பெறினென எச்சந்திரித்துரைப்பினு மமையும்.
வளாவுதல் - புணர்ச்சிக் காலத்தில் மாலையின் முறிந்த மலரும் அளகத்தப்பிய தாதுஞ் சிதறிக்
குங்குமத்தினழுந்தி வாங்குதற் கருமையாக விரவுதல். மதமென்றது காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பை.
69
8.4. மணக்குறி நோக்கிப்
புணர்ச்சி யுரைத்தது.
இதன் பொருள்: பருங்
கண் கவர் கொலை வேழப் படையோன் பட -பரிய கண்ணையும் விரும்பப்படுங் கொலையையுமுடைய
கருப்புச் சிலையாகிய படையையுடையவன் மாள; படர் தீத் தரும் கண்நுதல் தில்லை அம்பலத்தோன்
தட மால் வரை வாய் - செல்லுந் தீயைத்தருங் கண்ணையுடைத்தாகிய நுதலையுடைய தில்லையம்பலத்தானது
பெரிய மால்வரையிடத்து; அவ் வான் சுனை - நீயாடிய அப்பெரிய சுனை; கருங்கண் சிவப்ப கனிவாய்
விளர்ப்ப - கரியகண் சிவப்பத் தொண்டைக் கனிபோலும் வாய் விளர்ப்ப; அளி பின்வரும் கண்
ஆர் கள் மலை மலர் சூட்டவற்றோ-அளிகள் பின்றொடர்ந்து வருங் கண்ணிற்கு ஆருங் கள்ளையுடைய
மலைமலரைச் சூட்டவற்றோ? சொல்வாயாக எ-று.
|