பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
217

நடுங்க நாட்டம்

தீவா யுழுவை கிழித்ததந்
        தோசிறி தேபிழைப்பித்
    தாவா மணிவேல் பணிகொண்ட
        வாறின்றொ ராண்டகையே.

72

_______________________________________________________________

குறிப்பு: இதனுள் தலைமகளை நடுங்க நாடியதெவ்வாறெனின், தன்கொடிய வாயைப் புலி அங்காந்தது, உழுவையினது தீவாயை வேறொன்று கிழித்தது. உழுவையினது தீவாய் பிறிதொன்றனைக் கிழித்தது என இம்மூன்று பொருளும் படுகையான், இது நடுங்க நாட்டமாயிற்று. என்னை, தலைமகள் இங்ஙனம் நடுங்கியாராயும் வண்ணம் தோழி நாடுகையான். தீவாயுழுவை கிழித்ததென்ற இம்மூன்று பொருளும் வினா. இங்ஙனந் தோழியுரைப்பத் தலைமகள் நாடி நடுங்காநிற்கக்கண்டு, ஓராண்டகை வேலைப் பணிகொண்டவா றென்னென நடுக்கந் தீர்த்ததாயிற்று. இது கரவுநாடுதல். அஃதாவது வெளிப்படச் சொல்லுஞ் சொல்லன்றிப் பிறிதொன்றன் மேல்வைத்துச் சொல்லுதல். இதுவும் பெருந்திணைப்பாற்படும். மெய்ப்பாடு: நகை. பயன்: நடுங்கநாடிக் கரவுநாடியுணர்தல்.

    நிருத்தம்பயின்றவன் (62) என்பது தொட்டு மெய்யேயிவற்கில்லை (66) என்பதன்காறும் வர ஐந்துபாட்டினும் முன்னுறவு உணர்தலையும் ஐயுறவாக்கி, இருவருமுள்வழி யவன்வரவுணர் வினைத் துணிந்துணர்வாக்கினார். மைவார் (67) என்பது தொட்டு இதன் காறும்வர இவையாறினும் முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் இருவருமுள்வழியவன் வரவுணர்தலென்னும் மூன்றனையுந் துணிந்துணர்வாக்கினார். ஈண்டிவ்விகற்பங் கண்டுகொள்க.

72

நடுங்கநாட்டம் முற்றிற்று.