10
10. மடற்றிறம்
மடற்றிறம் என்பது நடுங்கநாடவும்
பெருநாணினளாதலின், தலைமகள் தன்குறை சொல்லமாட்டாது நிற்ப, இனி இவளிறந்துபடவுங்கூடுமென உட்கொண்டு
தலைமகனுடன் சொல்லாடத் தொடங்காநின்ற தோழி, தானும் பெருநாணினளா தலிற் பின்னுந் தலைமகன்
குறையுறவேண்டிநிற்ப, அந்நிலைமைக்கட்டலைமகன் சென்று, இந்நாளெல்லாம் என்குறை நின்னான் முடியுமென்று
நின்னை வந்திரந்தேன்: இது நின்னான் முடியாமையின் யான் மடலூர்ந்தாயினும் இக்குறை முடித்துக்
கொள்வேனெனத் தோழிக்குக் கூறாநிற்றல். என்னை.
முன்னுற வுணரினு மவன்குறை யுற்ற
பின்ன ரல்லது கிளவிதோன் றாது.
-இறையனாரகப்
பொருள் -9
என்பவாகலின்.
ஆற்றா துரைத்த லுலகின்மேல் வைத்த
றன்றுணி புரைத்த லொடுவகை யுரைத்த
லருளா லரிதென னடையா லரிதென
லவயவ மெழுத லரிதென விலக்க
லுடம்படாது விலக்க லுடம்பட்டு விலக்க
றிடம்பட வொன்பதுஞ் செப்புங்
காலை
வடம்படு முலைமேன் மடலா கும்மே.
________________________________________________________________
மடற்றிறம் - இதன் பொருள் : ஆற்றாதுரைத்தல்,
உலகின்மேல் வைத்துரைத்தல், தன்றுணிபுரைத்தல், மடலேறும்வகையுரைத்தல், அருளாலரிதெனவிலக்கல்,
மொழிநடையெழுதலரிதெனவிலக்கல், அவயவமெழுதலரிதெனவிலக்கம், உடம்படாதுவிலக்கல், உடம்பட்டு
விலக்கல் எனவிவை ஒன்பதும் மடற்றிறமாம் எ-று.
அவற்றுள்-
|