என
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
ஆசியுரை
எனவே வாழ்விற்கு முதலாகிய - அடித்தளமாயுள்ள
அறத்தின் வழியே பொருளை ஈட்டி அப்பொருளின் வழியே இன்பம் துய்த்து, இவ்வுலக சிற்றின்பம்
கைக்கும்போது உயிர்கள் வீடுபேறு அடைகின்றன. வீடுபேறே முடிந்த பயனாகும்.
பரனை நினைந்து பணி செய்க:
அறம் பொருள் இன்பம் வீடு என்பன
பற்றி ஒளவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள்
எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து -
ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து
இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
- ஒளவையார், தனிப்பாடல்
திரட்டு பா. 64
நல்லோருக்கும் நற்செயலுக்கும்
கொடுத்தலே அறமாகும். தீவினைவிட்டு நல்வழியில் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும், காதலர்
இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பமாகும். பரனை நினைந்து அவனருளால் இம்மூன்றையும் விட்டதே
பேரின்ப வீடாகும்.
வீடு என்றால் விடுபடுதல். விடுதலையை
மட்டும் ஒளவையார் சொல்லவில்லை. இவ்வுலகைவிட்டால் உயிர் பெறுவது பேரின்ப வீடாகும் என்கிறார்.
இதனால்தான் வீட்டை, வீடுபேறு எனக் குறித்தனர் அறவோர். வீடு - துன்ப நீக்கம். பேறு - இன்ப
ஆக்கம் என்கிறது சித்தாந்த சைவம்.
இப்பாடலில் பரனை நினைந்து என்பதே
முக்கியமானது. அவனன்றி அவனியில் ஒன்றும் அசையாதல்லவா? எனவே பரனை நினைந்து ஈதலே அறம் எனப்படும்.
பரனை நினைந்தாலே தீவினைவிட்டு நல்வினைப்பட்டுப் பொருளீட்டும் செயல் நிகழும் பரனை நினைந்தாலே
இன்பமும் எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுடன் நிகழும். பரனை நினைந்தாலே
இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும்.
எனவே இப்பாட்டில் “பரனை நினைந்து”
என்பதை இடை நிலைத் தீவகமாகக் கொண்டு பொருள் காணவேண்டும்.
அடுத்தவன் பொருளை அறம் செய்யலாமோ:
பரனை நினைந்து என்று ஏன்
சொன்னார் என்றால், எல்லாப்
|