பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
222

10

மடற்றிறம்

10.4 மடலேறும் வகையுரைத்தல்

   
மடலேறும் வகையுரைத்தல் என்பது துணிபுகூறவும் பெருநாணினளாதலிற் சொல்லாடாத தோழிக்கு வெளிப்படத் தான் நாணிழந்தமைதோன்ற நின்று, யான் நாளை நின்னூர்த்தெருவே மடலுங்கொண்டு வருவேன்; பின்வருவது காணெனத் தலைமகன் தான் மடலேறும்வகை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

76. கழிகின்ற வென்னையும் நின்றநின்
        கார்மயில் தன்னையும்யான்
   கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
        கொண்டென் பிறவிகெட்டின்
   றழிகின்ற தாக்கிய தாளம்
        பலவன் கயிலையந்தேன்
   பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
        தெருவிடைப் போதுவனே.

76

_______________________________________________________________

10.4.  அடல்வேலவ னழிவுற்று
      மடலேறும் வகையுரைத்தது.


   
இதன் பொருள்: கழிகின்ற என்னையும் - கழியாநின்ற என்னையும்; நின்ற நின் கார் மயில் தன்னையும் - யானத்தன்மையனாகவுந் தன்றன்மையளாய் நின்ற நின்னுடைய கார் மயிறன்னையும்; கிழி ஒன்ற நாடி எழுதி - கிழிக்கட்பொருந்த ஆராய்ந்தெழுதி; யான் கைக்கொண்டு-யான் அதனைக் கையிற் கொண்டு; என் பிறவி இன்று கெட்டு அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை - என் பிறவியை இன்றுகெட்டழியாநின்றதாகச் செய்த தாளையுடைய அம்பலவனது கயிலையின்; அம் தேன் பொழிகின்ற சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவன் - அழகிய தேன்பொழியாநின்ற சாரற் கணுண்டாகிய நுமது சீரூர்த்தெருவின்கட்டிரிவேன்; பின்வருவது காண் எ-று.

    தனக்கு அவளயலென்னுங் கருத்தினனாய், நின்கார் மயிலென்றான், என்னையும் நின் கார்மயிறன்னையும் மடலிடத்தெழுது வேனென்றதென்னை, கார்மயிலை யெழுதுவதன்றித் தன்னையுமெழுதுமோவெனின், மடலெழுதிக் கையிற்கொண்டால்