10
மடற்றிறம்
10.5 அருளாலரிதெனவிலக்கல்
அருளாலரிதென விலக்கல் என்பது
தலைமகன் வெளிப்பட நின்று மடலேறுவேனென்று கூறக்கேட்ட தோழி இனியிவன் மடலேறவுங்கூடுமென உட்கொண்டு,
தன்னிடத்து நாணினை விட்டுவந்து, எதிர்நின்று, நீர்மடலேறினால் உம்முடைய அருள் யாரிடத்ததாமென்று
அவனதருளை யெடுத்துக்கூறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
77. நடனாம் வணங்குந்தொல்
லோனெல்லை
நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண்
சேவலும்
முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே.
77
_____________________________________________________________
உரையாடுகையின்றி இவனும்
ஓவியமாகலின், மடலின்றலையிலே தன்னூரையுந் தன்பேரையும் அவளூரையும்
அவள்பேரையும் எழுதுகையால் என்னையுமென்றான். கார்மயில் - கார்காலத்து மயில். அழிகின்றதென
நிகழ்காலத்தாற் கூறினார். பிறத்தற்குக் காரணமாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய
மலத்துடனே வினை நின்றமையின். மெய்ப்பாடும் பயனும் அவை
76
10.5. அடல்வேலண்ண
லருளுடைமையின்
மடலேற்றுனக் கரிதென்றது.
இதன் பொருள்: நடன்
- கூத்தன்; நாம் வணங்கும் தொல்லோன் - நாம் வணங்கும் பழையோன்; நான்முகன் மால் எல்லை
அறியாக் கடன் ஆம் உருவத்து அரன் - நான்முகனும் மாலும் முடியும் அடியுமாகிய எல்லைகளை அறியாத
இயல்பாகிய வடிவையுடைய அரன்; தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை - அவனது தில்லைக்கணுண்டாகிய
வளத்தையுடைய கண்ணிற்கார்ந்த பெண்ணைக்கண்; உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடல் நாம் புனைதரின் - உடனாகும் பெடையோடும் ஒள்ளியசேவலையும் முட்டையையுங் காவலையழித்து
மடலை நாம் பண்ணின்; மன்ன - மன்னனே; இன் அருள் யார்
|