பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
225

10

மடற்றிறம்

10.7 அவயவமெழுத லரிதென விலக்கல்

   
அவயவமெழுதலரிதென விலக்கல் என்பது அவளது மொழி நடைகிடக்க, இவைதாமெழுத முடியுமோ? முடியுமாயின் யான்சொன்ன படியே தப்பாமலெழுதிக்கொண்டு வந்தேறுமென்று அவளதவயவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

79. யாழு மெழுதி யெழின்முத்
        தெழுதி யிருளின்மென்பூச்
   சூழு மெழுதியொர் தொண்டையுந்
        தீட்டியென் தொல்பிறவி
   ஏழு மெழுதா வகைசிதைத்
        தோன்புலி யூரிளமாம்
   போழு மெழுதிற்றொர் கொம்பருண்
        டேற்கொண்டு போதுகவே.

79

_______________________________________________________________

நுமது சித்திரசாலையின்கண் எ-று.

    கடிச்சந்தயாழ்கற்ற மென்மொழியென்பதற்குச் சிறந்தவோசையையுடைய யாழ்வந்தினிதாக வொலித்தலைக்கற்ற மென்மொழி யென்றுரைப்பாருமுளர். படிச்சந்தமென்பது ஒன்றன் வடிவை யுடைத்தாய் அதுவென்றே கருதப்படுமியல்பையுடையது. படிச்சந்த மென்பது: பிரதிச்சந்தமென்னும் வடமொழிச் சிதைவு.

78

10.7.  அவயவ மானவை
     யிவையிவை யென்றது.

   
இதன் பொருள்: யாழும் எழுதி - மொழியாக மொழியோடொக்கும் ஓசையையுடைய யாழையுமெழுதி; எழில் முத்தும் எழுதி - முறுவலாக எழிலையுடைய முத்துக்களையுமெழுதி; இருளில் மென்பூச் சூழும் எழுதி-குழலாக இருளின்கண் மெல்லிய பூவானியன்ற சூழையு மெழுதி; ஒரு தொண்டையும் தீட்டி - வாயாக ஒரு தொண்டைக் கனியையு மெழுதி; இள மாம் போழும் எழுதிற்று ஓர் கொம்பர் உண்டேல் - கண்ணாக இளையதாகிய மாவடுவகிரையும் எழுதப்பட்டதோர் கொம்ப ருண்டாயின்; கொண்டு போதுக-அதனைக்கொண்டு எம்மூர்க்கண் மடலேற வாரும் எ-று.

   
என் தொல் பிறவி ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர்.