New Page 1
மொய்ந்நாண் முதுதிரை
வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே.
81
__________________________________________________
அமுதாமென்னும் பெயரெச்சம் கண்டமென்னு
நிலப்பெயர் கொண்டது. மைந்நாணுங் கண்டமெனவியையும், மணிகண்டனென்பது வடமொழி யிலக்கணத்தாற்றொக்குப்
பின்றிரிந்து நின்றது. மொய்-வலி; ஈண்டுப் பெருமைமேனின்றது. குற்றேவல் செய்வார்கட்பெரியோர்செய்யும்
அருள் எக்காலத்து மொருதன்மைத்தாய் நிகழாதென்னுங் கருத்தான் இந்நாளிது வென்றாள். எனவே,
தலை மகளது பெருமையுந் தன்முயற்சியது அருமையுங் கூறியவாறாயிற்று, அரா குரா வென்பன; குறுகி நின்றன.
வருமென்பது; உவமைச்சொல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.
81
மடற்றிறம் முற்றிற்று.
|