பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
232

புர

குறை நயப்புக் கூறல்

புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
        பூங்கணை வேள்கொலென்னத்
    தெரியே முரையான் பிரியா
        னொருவனித் தேம்புனமே.

83

______________________________________________________________

தளிரையொக்கும் மேனியையுடையனுமாய்; ஈர்ந்தழையன்-வாடாத தழையையுடையனுமாய்; இத் தேம்புனம் பிரியான் - இத்தேம்புனத்தைப் பிரிகின்றிலன்; உரையான் - ஒன்றுரைப்பதுஞ் செய்கின்றிலன்; புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொல் என்னத் தெரியேம் - அவன்றன்னைப் புலியூர்க் கணுளனாகிய புரிதலைச்சேர்ந்த சடையை யுடையோனுடைய புதல்வனோ பூவாகிய அம்பையுடைய காம வேளோவென்று யாந்துணிகின்றிலேம்; என்ன மாயம் கொலோ - ஈதென்ன மாயமோ!  எ-று

   
அவ்வாறு இறப்பப் பெரியோன் இவ்வாறு எளிவந்தொழுகுதல் என்ன பொருத்தமுடைத்தென்னுங் கருத்தால், என்ன மாயங்கொலோவென்றாள். புலியூர்ப்புரிசேர் சடையோன் புதல்வன் கொலென்றதனால் நம்மையழிக்க வந்தானோவென்றும், பூங்கணை வேள்கொலென்றதனால் நம்மைக்காக்க வந்தானோ வென்றும் கூறியவாறாயிற்று. புரிசேர்சடையோன் புதல்வனென்றதனை மடற்குறிப்பென்றுணர்க. கொல்: ஐயம். மேனியன் தழைய னென்பன:  வினையெச்சங்கள். மென்மொழி மொழிந்தது - மென் மொழியான் மொழிந்தது.

83.