பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
239

11

குறை நயப்புக் கூறல்

11.7 வன்மொழியாற் கூறல் 

   
வன்மொழியாற் கூறல் என்பது புலந்து கூறாநின்ற தோழி அக்கொடியோன் அருளுறாமையான் மெய்யிற் பொடியுங் கையிற்கிழியுமாய் மடலேறத் துணியாநின்றான்; அக்கிழிதான் நின்னுடைய வடிவென்று உரையுமுளதா யிருந்தது; இனி நீயும் நினக்குற்றது செய்வாயாக; யானறியேனென வன்மொழியாற் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

88. மேவியந் தோலுடுக் குந்தில்லை
        யான்பொடி மெய்யிற்கையில்
   ஓவியந் தோன்றுங் கிழிநின்
        னெழிலென் றுரையுளதால்

____________________________________________________________

படும்” (குறள். 824) என்பதுபோல. மறப்பதென்பது; வியங்கோள். வருந்திய சொல்லின்-வருத்தத்தை வெளிப்படுக்குஞ் சொல்லான். சொல்லி யென்பதூஉம் பாடம். வகுத்துரைத்தது-வெளிப்படச் சொல்ல வேண்டுஞ் சொற் கேட்குமளவுஞ் சொல்லுஞ் சொல்.

    அஃதாவது நீ சொல்லத்தகுங் காதற் றோழியர்க்கு வெளிப்படச் சொல்லென்று புலந்து கூறியது.

87

11.7.  கடலுல கறியக் கமழலந் துறைவன்
     மடலே றும்மென வன்மொழி மொழிந்தது.


   
இதன் பொருள்: மெய்யில் மேவி அம் தோல் உடுக்கும் தில்லை யான்பொடி - மெய்க்கட் பூசியது விரும்பி நல்ல தோலைச் சாத்துந் தில்லையானுடைய நீறு; கையில் ஓவியம் தோன்றும் கிழி-கையின்கணுண்டாகியது சித்திரம் விளங்குங் கிழி; நின் எழில் என்று உரை உளது - அக்கிழிதான் நின் வடிவென்று உரையுமுளதா யிருந்தது; தூவி அம் தோகை அன்னாய் - தூவியையுடைய அழகிய தோகையை யொப்பாய்; என்ன பாவம் - இதற்குக் காரணமாகிய தீவினை யாதென்றறியேன்! ; சொல் ஆடல் செய்யான் - ஒன்று முரையாடான்; பாவி - இருந்தவாற்றான் அக்கொடியோன்; அந்தோ பனை மா மடல் ஏறக்கொல் பாவித்தது -அந்தோ! பனையினது பெரிய மடலேறுதற்குப் போலு நினைந்தது எ-று.