New Page 1
குறை நயப்புக் கூறல்
சொன்னாரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே.
89
______________________________________________________________
சொன்னார் எனும் இத்துரிசு
துன்னாமை - அயலார் சொன்னாரென்று இவள் வந்து சொல்லுகின்ற இக்குற்றம் என்கண்
வாராமல்; என் ஆழ் துயர்வல்லையேல்-அவராற்றாமை கூறக் கேட்டலானுண்டாகிய என தாழ்துயரை உள்ளவாறு
சொல்ல வல்லையாயின்; நீர்மை இனிய வர்க்குச் சொல்லு-நீர்மையையுடைய இனியவர்க்கு நீ
சொல்லுவாயாக எ-று.
புரிதல்-மிகுதல். அயலார்
சொன்னாரென்றது “ஓவியந் தோன்றுங்கிழி நின்னெழிலென்றுரையுளதால்” (திரு.8 கோவை பா.88) என்றதனைப்
பற்றி. அயலார் சொன்னாரென்பதற்கு யானறியாதிருப்ப அவராற்றாமையை அயலார்வந்து சொன்னாரென்னும்
இக்குற்றமென்றுரைப்பினு மமையும். இப்பொருட்கு அயலாரென்றது தோழியை நோக்கி. ஆழ்துயர்-ஆழ்தற்கிடமாந்துயர்:
இவ்வாறு அவராற்றாமைக்கு ஆற்றளாய்
நிற்றலின், தோழி குறைநேர்ந்தமை யுணருமென்பது பெற்றாம்; ஆகவே இது தோழிக்கு வெளிப்பட மறுமொழி
கூறியவாறாயிற்று. சொல்லு நீர்மையினியவர்க்- கென்றவதனால் தன்றுயரமும் வெளிப்படக்கூறி மடலால்
வருங் குற்றமுந் தன்னிடத்து வாராமல் விலக்கச் சொன்னாளாயிற்று.
மெய்ப்பாடு: அச்சம். ஆற்றானெனக்
கேட்டலிற் பயன்: குறைநேர்தல். 89
குறைநயப்புக் கூறல்
முற்றிற்று.
|