பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
247

12

சேட் படை

12.5 படைத்து மொழியான் மறுத்தல்

   
படைத்து மொழியான் மறுத்தல் என்பது நினைவறிந்தல்லது ஏலேமென்று மறுத்துக்கூறியவாறன்று; நினைவறிந்தால் ஏற்பே மென்றவாறா மென உட்கொண்டு நிற்ப, சிறிது புடை பெயர்ந்து அவணினைவறிந்தாளாகச் சென்று, இத்தழை யானே யன்றி அவளும் விரும்பும், ஆயினும் இது குற்றாலத்துத் தழையாதலான் இத்தழை இவர்க்கு வந்தவாறு என்னோவென்று ஆராயப் படும்; ஆதலான் இத் தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

94. எழில்வா யிளவஞ்சி யும்விரும்
        பும்மற் றிறைகுறையுண்
   டழல்வா யவிரொளி யம்பலத்
        தாடுமஞ் சோதியந்தீங்
   குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
        றாலத்துக் கோலப்பிண்டிப்
   பொழில்வாய் தடவரை வாயல்ல
        தில்லையிப் பூந்தழையே.

94

_____________________________________________________________

மாயிருந்தவன்; நின்ற தில்லை அன்ன சூழ் ஆர் குழல் தொண்டை எழில் செவ்வாய் நவ்வி சொல் அறிந்தால் - அவனின்ற தில்லையை ஒக்குஞ் சுருண்ட நிறைந்த குழலினையுந் தொண்டைக் கனிபோலும் எழிலையுடைய செவ்வாயினையுமுடைய  நவ்வி போல்வாளது மாற்ற மறிந்தால்; சிலம்ப தரும் தழை தாழாது எதிர் வந்து கோடும் - பின் சிலம்பனே நீ தருந்தழையைத் தாழாது நின்னெதிர்வந்து கொள்வேம்;  அவள் சொல்வது அறியாது கொள்ள வஞ்சுதும் எ-று.

   
சூழாரென்புழிச் சூழ்தல் சூழ்ந்து முடித்தலெனினுமமையும் தில்லையன்ன நவ்வியெனவியையும்.

93

12.5.  அருந்தழை மேன்மேற் பெருந்தகை கொணரப்
      படைத்துமொழி கிளவியிற் றடுத்தவண் மொழிந்தது.

   
இதன் பொருள்:  எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும்-நின்பாற்றழை கோடற்கு யானேயன்றி எழில் வாய்த்த இளைய வஞ்சியையொப்பாளும் விரும்பும்;  மற்று இறை குறை உண்டு-