பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
250

12

சேட் படை

12.7 இசையாமை கூறி மறுத்தல்

   
இசையாமை கூறி மறுத்தல் என்பது தலைமகணாணுரைத்து மறுத்த தோழி அவணாணங்கிடக்க யாங்கள் வேங்கைமலரல்லது தெய்வத்திற்குரிய வெறிமலர்சூட அஞ்சுதும்;  ஆதலான் இக்கண்ணி எங்குலத்திற் கிசையாதென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

96. நறமனை வேங்கையின் பூப்பயில்
        பாறையை நாகநண்ணி
   மறமனை வேங்கை யெனநனி
        யஞ்சுமஞ் சார்சிலம்பா
   குறமனை வேங்கைச் சுணங்கொ
        டணங்கலர் கூட்டுபவோ
   நிறமனை வேங்கை யதளம்
        பலவன் நெடுவரையே.

96

____________________________________________________________

12.7.  வசைதீர் குலத்திற்
     கிசையா தென்றது.


   
இதன் பொருள்: நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி-தேனிற்கிடமாகிய வேங்கைப் பூக்கள் பயின்ற பாறையை யானை சென்றணைந்து; மறம் மனைவேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா-அதனைத் தறுகண்மைக்கிடமாகிய புலியென்று மிகவுமஞ்சும் மஞ்சாருஞ் சிலம்பையுடையாய்;  நிறம் மன்வேங்கை அதள் அம்பலவன் நெடுவரை-நிறந்தங்கிய புலி யதளையுடைய அம்பலவனது நெடிய இவ்வரைக்கண்; குறம் மனை வேங்கைச் சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ-குறவர் மனையிலுளவாகிய வேங்கையினது சுணங்குபோலும் பூவோடு தெய்வத்திற்குரிய கழுநீர் முதலாகிய பூக்களைக் கூட்டுவரோ? கூட்டார் எ-று.

   
நறமனைவேங்கை யென்பதற்கு நறாமிக்கபூ வெனினுமமையும். குறமனை கூட்டுபவோ வென்பதற்குக் குறக்குடிகள் அவ்வாறு கூட்டுவரோ வென்றுரைப்பாருமுளர். நிறமனையென்புழி ஐகாரம்;  அசைநிலை; வியப்பென் பாருமுளர். நிறம் அத்தன்மைத்