|
றுற
சேட் படை
றுற்றில ளுற்ற தறிந்தில
ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே.
97
___________________________________________________________
அதுவேயுமன்றி ஆகத்தின் கட்கிடந்தொளி
விளங்கும் புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பையுடையவனது; புலியூர் அன்ன பூங்கொடி - புலியூரையொக்கும்
பூங்கொடி; உற்றது அறிந்திலள்-என்னுழை நீர் வந்தவாறும் யானுமக்குக் குறைநேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்;
அதனாற் செவ்விபெற்றுச் சொல்லல் வேண்டும் எ-று.
கண்டென்பது கற்றலோடும்,
அருளவென்பது பெறுதலோடும் முடிந்தன. புற்றிலவென்பதற்கு வேள்வித்தீயிற் பிறந்து திருமேனிக்கண்
வாழ்தலாற் புற்றையுடையவல்லாத அரவென்றுரைப்பினு மமையும். ஆரத்தொளி யென்பதூஉம் பாடம். இவை
யேழிற்கும் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். முடியாதெனக் கருதுவாளாயின் இறந்துபடுமென்னும்
அச்சமும் முடிக்கக் கருதலிற் பெருமிதமுமாயிற்று.
பயன்: செவ்விபெறுதல். மேற்றலைமகளைக்
குறைநயப்பித்து அவளது கருத்துணர்ந்து தன்னினாகிய கூட்டங் கூட்டலுறுந்தோழி தலைமகன் றெருண்டு
வரைந்தெய்துதல் வேண்டி, இவை முதலாக முன்னர் விண்ணிறந்தார் (தி.8 கோவை பா. 107) என்னும்
பாட்டீறாக இவையெல்லாங்கூறிச் சேட்படுத்தப்பெறுமென்பது.
97
|