பன
சேட் படை
பனிதரு திங்க ளணியம்
பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே.
98
12.10 நீயேகூறென்றுமறுத்தல்
நீயே கூறென்று மறுத்தல் என்பது இவள்
இவ்விடத்து நிலைமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட்கிடந்த பரிவினானன்றே; இத்துணைப் பரிவுடையாள்
எனக்கிது முடியாமை யில்லையெனத் தலைவன் உட்கொண்டு போய்ப் பிற்றைஞான்று செல்ல, தோழி
யான் குற்றேவன் மகளாகலிற் றுணிந்துசொல்ல மாட்டுகின்றிலேன்; இனி நீயே சென்று நின்குறையுள்ளது
சொல்லெனத் தானுடம்படாது மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
99. அந்தியின் வாயெழி
லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல
வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
__________________________________________________________
12.10. அஞ்சுதும் பெரும பஞ்சின்
மெல்லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.
இதன் பொருள்: அந்தியின்வாய்
எழில் அம்பலத்து எம்பரன் அம்பொன் வெற்பில் - அந்தியின்கண் உண்டாகிய செவ்வானெழிலையுடைய
அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து;
பந்தியின்வாய்ப் பைந்தேனொடும் பலவின் சுளை - பந்தியாகிய நிரையின்கட் செவ்வித்தேனோடும்
பலாச்சுளையை; கடுவன் மந்தியின்வாய்க் கொடுத்து ஓம்பும் சிலம்ப - கடுவன் மந்தியினது வாயில்
அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ் சிலம்பை யுடையாய்; மனம் கனிய முந்தி இன் வாய்மொழி அம்
மொய் குழற்கு நீயே சென்றுமொழி - அவள் மனநெகிழ விரைந்து இவ்வினிய வாய்மொழிகளை அம்மொய்த்த
குழலையுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக எ-று.
எல்லாப்பொருளையுங் கடந்தானாயினும்
எமக்கண்ணிய
|