பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
255

மந

சேட் படை

    மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
        சிலம்ப மனங்கனிய
    முந்தியின் வாய்மொழி நீயே
        மொழிசென்றம் மொய்குழற்கே.

99

12.11 குலமுறை கூறிமறுத்தல்

   
குலமுறை கூறிமறுத்தல் என்பது நீயே கூறெனச் சொல்லக் கேட்டு, உலகத்து ஒருவர்கண் ஒருவர் ஒருகுறை வேண்டிச் சென்றால் அக்குறை நீயே முடித்துக்கொள்ளென்பாரில்லை; அவ்வாறன்றி இவளிந்நாளெல்லாம் என்குறைமுடித்துத் தருவேனென்று என்னை யவமே யுழற்றி, இன்று நின்குறை நீயே முடித்துக் கொள்ளென்னாநின்றாளெனத் தலைமகன் ஆற்றாதுநிற்ப, அவனை யாற்றுவிப்பது காரணமாக, நீர் பெரியீர், யாஞ்சிறியேம்; ஆகலான் எம்மோடு நுமக்குச் சொல்லாடுதல் தகாதெனக் குலமுறைகூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

100. தெங்கம் பழங்கமு கின்குலை
        சாடிக் கதலிசெற்றுக்
    கொங்கம் பழனத் தொளிர்குளிர்
        நாட்டினை நீயுமைகூர்

_____________________________________________________________

னென்னுங்கருத்தான், எம்பரனென்றார். வெற்பிற் சிலம்பவென வியையும், பந்தி பலாநிரையென்பாருமுளர். சிலம் பென்றது வெற்பினொரு- பக்கத்துளதாகிய சிறுகுவட்டை. வாய்மொழி மொழியென்னுந் துணையாய் நின்றது. மனங்கனியு மென்பதூஉம் நின்வாய்மொழி யென்பதூஉம் பாடம். மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் கடுவன் தானேகொடுத்து மனமகிழ்வித்தாற் போல அவள் உயிர்வாழ்வதற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயேகூறி அவளைமனமகிழ்விப் பாயாகவென உள்ளுறையுவமங் கண்டுகொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.

12.11  தொழுகுலத்தீர் சொற்காகேம்
     இழிகுலத்தே மெனவுரைத்தது.


   
இதன் பொருள்: தெங்கம்பழம் கமுகின் குலை சாடி - மூக்கூழ்த்து விழுகின்ற தெங்கம்பழம் கமுகினது குலையை உதிர மோதி; கதலி செற்று-வாழைகளை முறித்து; கொங்கம்பழனத்து ஒளிர்