பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
268

சேட் படை

மாலார்க் கரிய மலர்க்கழ
        லம்பல வன்மலையிற்
    கோலாப் பிரசமன் னாட்கைய
        நீதந்த கொய்தழையே.

110

12.22 குறிப்பறிதல்

   
குறிப்பறிதல் என்பது தலைமகன் மாட்டுத் தழை யெதிர்ந்த தோழி இவளுக்குத் தெற்றெனக் கூறுவேனாயின் இவள் மறுக்கவுங்கூடுமென உட்கொண்டு, இந்நாள்காறுந் தழையேலாமைக்குத் தக்க பொய்சொல்லி மறுத்தேன்; இன்று அவனது நோக்கங் கண்டபின் பொய்சொல்லுநெறி அறிந்திலேன்; இனியவனுக்குச் சொல்லுமாறென்னோவெனத் தழையேற்பித்தற்குத் தலைமகளது குறிப்பறியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

111. கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
        யானையன் னான்கரத்தில்
    தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
        காண்பனின் றம்பலத்தான்

_____________________________________________________________

வேண்டுதுமாதலின் இற்பழியாங் குற்றம் இதற்குளவாயினல்லது இதனையேலே மென்று கூறினாளாக வுரைக்க. என்றது இற்பழியாங் குற்றம் இதற்குளவாகலான் ஏற்கின்றேம். நீ செய்தவுதவியைப் பற்றி அல்லதேலேமென்ற வாறெனவறிக. கோலாற்பிரச மென்பது பாடமாயின், கோலிடத் துப்பிரசம் என்றது கோற்றேன். இது சுவைமிகுதியுடைமை கூறியவாறென வுரைக்க. தோலாக்கரிவென்றது முதலாயின நிகழ்ச்சி செய்யுளின் கட் கண்டிலே மென்பார்க்கு இயற்கைப் புணாச்சியது நீக்கத்தின்கண் நிகழ்ந்தனவென வுரைக்க. அன்றியும் படைத்துமொழி வகுத்துரை யென்பனவற்றானுமறிக. அகறல்-அவன் கருத்திற்ககறல். மெய்ப்பாடு:  அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநேர்தல்.

12.22.  தழையெதிரா தொழிவதற்கோர்
      சொல்லறியேனெனப் பல்வளைக்குரைத்தது.


    இதன் பொருள்: 
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் - குத்துகோலைக் காண்டலும் வெகுளுங் களியானையை யொப்பானுடைய; கரத்தில் தழை காண்டலும் பொய் முன் தழைப்பக்