12
சேட் படை
12.23 குறிப்பறிந்து கூறல்
குறிப்பறிந்து கூறல் என்பது குறிப்பறிந்து
முகங்கொண்டு, அதுவழியாகநின்று, யானை கடிந்த பேருதவியார் கையிற்றழையுந் துவளத்தகுமோ? அது
துவளாமல் யாம் அவரது குறைமுடிக்க வேண்டாவோவெனத் தோழி நயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
112. தவளத்த நீறணி யுந்தடந்
தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே.
112
_____________________________________________________________
12.23. ஏழைக் கிருந்தழை
தோழிகொண் டுரைத்தது.
இதன் பொருள்: சுரும்பு
ஆர் குழல் தூ மொழி - சுரும்பார்ந்த குழலையுடைய தூமொழியாய்; தவளத்த நீறு அணியும்
தடந் தோள் அண்ணல்-வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய தோள்களையுடைய அண்ணல்;தன் ஒரு
பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான்-தனதொரு பாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய்
மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன கவளத்த யானை - அவன் அன்றுரித்த யானையை
யொக்குங் கவளத்தையுடைய யானையை; கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் துவளத் தகுவனவோ-நம்மேல்
வாராமற் கடிந்தவருடைய கையவாகிய கண்ணிற்காருந் தழையும் வாடத் தகுவனவோ? தகா எ-று.
தவளத்தநீறு கவளத்தயானை
என்பன; பன்மையொருமை மயக்கம். சிவதத்துவத்தினின்றுஞ் சத்திதத்துவந் தோன்றலின் அவளத்தனாமென்றும்,
சத்திதத்துவத்தினின்றுஞ் சதாசிவதத்து வந்தோன்றலின் மகனாமென்றும் கூறினார். “இமவான்கட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன் றகப்பன்” (தி.8 திருப்பொற்சுண்ணம். பா.13)
|