பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
271

12

சேட் படை

12.24 வகுத்துரைத்தல்

   
வகுத்துரைத்தல் என்பது உதவிகூறவும் பெருநாணினளாதலின் தழை வாங்கமாட்டாதுநிற்ப, அக்குறிப்பறிந்து இருவகையானும் நமக்குப் பழியேறும்; அதுகிடக்க நமக்குதவி செய்தாற்கு நாமுமுதவி செய்யுமாறென்னோவெனத் தலைமகள் தழையேற்குமாறு வகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

113. ஏறும் பழிதழை யேற்பின்மற்
        றேலா விடின்மடன்மா
    ஏறு மவனிட பங்கொடி
        யேற்றிவந் தம்பலத்துள்
    ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
        மலைநம் மிரும்புனம் காய்ந்
    தேறு மலைதொலைத் தாற்கென்னை
        யாஞ்செய்வ தேந்திழையே.

113

______________________________________________________________

என்பதூஉம் அப்பொருண்மேல் வந்தது. கவளத்தயானை யென்பதனால் தான் விரும்புங் கவளமுண்டு வளர்ந்த யானையென்பதூஉம் கூறப்பட்டதாம். அது ஒருவராய் கட்டப்பட்டு மிடிப்பட்டதன்றாகலான், அதனை வெல்வதரிது; அப்படிப்பட்ட யானையையும் வென்றவர். அங்ஙனம் யானை கடிந்த பேருதவியார் கையனவுந் துவளத் தகுவனவோ வென்றதனால், அவருள்ளமுந் துவளாமற் குறைமுடிக்க வேண்டுமென்பது குறிப்பாற் கூறினாள். உம்மை: சிறப்பும்மை. ஏழைக்குரைத்ததென வியையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநயப்பித்தல்.

112

12.24.  கடித்தழை கொணர்ந்த காதற் றோழி
      மடக்கொடி மாதர்க்கு வகுத்து ரைத்தது.


   
இதன் பொருள்: ஏந்திழை - ஏந்திழாய்; தழை ஏற்பின் பழி ஏறும்-தழையையேற்பின் தாமேயொரு நட்புச்செய்தாரென்று பிறரிடத்து நமக்குப் பழியேறும்; ஏலாவிடின் அவன் மடல் மா ஏறும் - அதனையேலாதொழியின் பிறிதோருபாயமில்லையென்று அவன் மடலாகிய மாவையேறும்; இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் ஏறும்-தருமவடிவாகிய இடபத்தைக் கொடியின் கண்வைத்து நமது