பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
272

12

சேட் படை

12.25 தழையேற்பித்தல்

   
தழை யேற்பித்தல் என்பது தழையேலாதொழியினும் பழியேறுமாயிற் றழையேற்பதே காரியமென உட்கொண்டுநிற்ப, அக்குறிப்பறிந்து, இத்தழை நமக்கெளிய தொன்றன்று; இதனை யேற்றுக்கொள்வாயாகவெனத் தோழி தலைமகளைத் தழையேற்பியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

114. தெவ்வரை மெய்யெரி காய்சிலை
        யாண்டென்னை யாண்டுகொண்ட
    செவ்வரை மேனியன் சிற்றம்
        பலவன் செழுங்கயிலை

_____________________________________________________________

பிறவித்துன்பத்தை நீக்க ஒருப்பட்டுவந்து அம்பலத்தின்கணேறும்; அரன் மன்னும் ஈங்கோய் மலை-அரன் றங்கும் ஈங்கோய் மலையின்; நம் இரும் புனம் காய்ந்து-நமது பெரிய புனத்தையழித்து; ஏறும் மலை தொலைத்தாற்கு-நம்மை நோக்கி வந்தேறும் மலைபோலும் யானையைத் தோற்பித்தவற்கு; யாம் செய்வது  என்னை-யாஞ்செய்வதென்னோ? அதனை யறிகின்றிலேன் எ-று.

    மற்று: வினைமாற்று. மடன்மாவேறுமவனென்று தழையேலாவிடினும் பழியேறுமென்பதுபடக் கூறினமையானும், ஏறுமலை தொலைத்தாற் கென அவன் செய்த உதவி கூறினமையானும், தழையேற்பதே கருமமென்பதுபடக் கூறினாளாம். அன்றியுந் தழையேற்றால் நமக்கேறும்பழியை அறத்தொடுநிலை முதலாயின கொண்டு தீர்க்கலாமென்றும், ஏலாவிடின் அவன் மடன்மாவை யேறுதலான் வரும்பழி ஒன்றானுந் தீர்க்கமுடியா தென்றும் கூறியவாறாயிற்று, வகுத்துரைத்தல்-தழையேற்றலே கருமமென்று கூறுபடுத்துச் சொல்லுதல்.

113

12.25.  கருங்குழன் மடந்தைக் கரும்பெறற் றோழி
      இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.

   
இதன் பொருள்: அருளான் - நம்மாட் டுண்டாகிய அருளான்; இவ்வரைமேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ந்தழை - இம்மலைக்கட் சிலம்பன் எளிதாக்கொணர்ந்து தந்த வாடாத இத்தழை; செழும் கயிலை அவ்வரைமேல் அன்றி இல்லை - வளவிய கயிலையாகிய அம்மலை