பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
278

13

 பகற் குறி

13.3 குறியிடத்துக்கொண்டு சேறல்

   
குறியிடத்துக்கொண்டு சேறல் என்பது ஆடிடம் படர்ந்த தோழி தலைமகனுக்குத் தான்சொன்ன குறியிடத்து இவளைக் கொண்டு சென்றுய்க்கும்பொழுது, ஆயத்தாரைத் தம்மிடத்தினின்று நீக்க வேண்டுதலின் தினைகாத்தல் முதலாகிய விளையாட்டுக்களைத் தான் கூறவே அவ்வவ்விளையாட்டிற் குரியார் தலைமகள் அவ்வவ் விடங்களிலே வருவளென்று கருதித்தோழி சொன்ன வகையே அவ்வவ் விளையாட்டு விருப்பினான் எல்லாரும் பிரிவர்; அவ்வகை ஆயவெள்ளத்தைப் பிரிவித்து, தமியளாய் நின்ற தலைமகளையுங் கொண்டு யாமும் போய் மயிலாடல் காண்போமென அக்குறியிடத்துச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்-

118. தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
        கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
    சுனைவளம் பாய்ந்து துணைமலர்
        கொய்து தொழுதெழுவார் 

____________________________________________________________

அருள்செய்யுந் தையல் தங்குந் திருமேனியை யுடையவனாகிய; அம்பலத்தான் வரைத் தண் புனத்து - அம்பலத்தானது மலையிற் குளிர்ந்த புனத்தின்கண்; புயல் வளர் ஊசல் முன் ஆடி - புயல்தங்கு மூசலை முன்னாடி; பின்னைப் போய் - பின் போய்; அயல்பொலியும் வளர் குன்றில் நின்று அருவி ஏற்றும் - அதற்கயலாகிய பொலியும் உயர்ந்த குன்றின்கணின்று அருவியை ஏற்போம்; திரு உருவின்கயல் வளர் வாள் கண்ணி போதரு - திருப்போலும் உருவினையும் கயல்போலும் வாட்கண்ணையுமுடையாய், நீ போதுவாயாக எ-று.

    உயர்ந்த வழை மரத்திற் றொடுத்தலால், புயல் வளரூசலென்றாள், வளர்கண்ணெனவியையும், ஈண்டு வளர் என்பது: உவமையுருபு. வாள்: உவமை; ஒளியெனினுமமையும். தண்புனத்துப் போதருவென இயைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம்; உவகையுமாம். பயன்: குறியிடத்துப் போதருதல்.

117

13.3.  அணிவள ராடிடத் தாய வெள்ள
      மணிவளர் கொங்கையை மருங்க கன்றது.


   
இதன் பொருள்: தொழுது எழுவார் வினை வளம் நீறு எழ-