பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
280

13

 பகற் குறி

13.4. இடத்துய்த்து நீங்கல்

   
இடத்துய்த்து நீங்கல் என்பது குறியிடைக் கொண்டு சென்ற தோழி யான் அவ்விடத்துச்சென்று நின்குழற்குப் பூக்கொய்து வருவேன்; அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாதாதலான் நீ என்னோடு வாராது இங்கேநின்று பூங்கொய்வாயாக வெனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் தானீங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

119. நரல்வே யினநின தோட்குடைந்
        துக்கநன் முத்தஞ்சிந்திப்
    பரல்வே யறையுறைக் கும்பஞ்
        சடிப்பரன் தில்லையன்னாய்
    வரல்வேய் தருவனிங் கேநிலுங்
        கேசென்றுன் வார்குழற்கீர்ங்
    குரல்வே யளிமுரல் கொங்கார்
        தடமலர் கொண்டுவந்தே.

119

_____________________________________________________________

13.4.  மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து
      நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.


    இதன் பொருள்: 
உங்கே சென்று - யான் உவ்விடத்தே சென்று; ஈர்ங்குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தடமலர் கொண்டு வந்து -தேனானீரிய பூங்கொத்தைமூடிய அளிகள் முரலுந் தாதுநிறைந்த பெரியமலர்களைக் கொய்து கொண்டு வந்து; உன் வார் குழற்கு வேய்தருவன்-நின்னுடைய நெடியகுழற்கண் வேய்வேன்; பரன் தில்லை அன்னாய் - பரனது தில்லையை யொப்பாய்; நரல் வேய் இனம் நின தோட்கு உடைந்து உக்க நல்முத்தம் சிந்தி-காற்றானொன்றோடொன்று தேய்ந்து நரலும் வேய்த்திரள் உன்னுடைய தோள்கட்கஞ்சிப் பிளத்தலான் உக்க நல்ல முத்துக்கள் சிதறுதலால்; பரல் வேய் அறை பஞ்சு அடி உறைக்கும் - பரல் மூடிய பாறை நினது பஞ்சடிக் கணுறைக்கும்; வரல் இங்கே நில் - அதனான் என்னோடு ஆண்டு வரற்பாலையல்லை, ஈண்டு நிற்பாயாக எ-று.

   
யான்றருவன் நீ வேயென்றும் பிறவாற்றானு முரைப்பாருமுளர். குரலென்பது பூங்கொத்தை. தடமல ரென்பதற்குத் தடத்து மலரென்றுரைப்பாருமுளர். பரல்வேயறை யுறைக்கும் வரல்; வேய்தருவன்; இங்கேநில்லென்று தலைமகளைத் தோழி கூறி