13
பகற்
குறி
13.5 உவந்துரைத்தல்
உவந்துரைத்தல் என்பது தோழி
தலைமகளைக் குறியிடை நிறுத்தி நீங்காநிற்பத் தலைமகன் சென்றெதிர்ப்பட்டு, இக்குவட்டை
மாசுணப்பள்ளியாகவும் என்னைத் திருமாலாகவும் நினைந்தோ நீ இப்பொழிற்கண் வந்து நின்றதெனத்
தலைமகளை உவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
120. படமா சுணப்பள்ளி
யிக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ்
வார்பொழிற்கே.
120
______________________________________________________________
இவ்விடத்தே நில்லென்றாள். மெய்ப்பாடு:
அது. பயன்: தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்குதல்.
119
13.5. களிமயிற் சாயலை
யொருசிறைக் கண்ட
ஒளிமலர்த் தாரோ னுவந்து ரைத்தது.
இதன் பொருள்: வடம் ஆர்
முலை மடவாய்-வடமார்ந்த முலையையுடைய மடவாய்; தில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வார்பொழிற்கு
வந்து வைகிற்று-தில்லைக்கணின்றவனது குளிர்ந்த கயிலைக்கண் நீண்ட இப்பொழிலிடத்து வந்து தங்கியது;
இக்குவடு படமாசுணப்பள்ளி ஆக்கி-இக்குவட்டைப் படத்தையுடைய மாசுணமாகிய பள்ளியாக்கி; என்னைப்
பங்கயக் கண் அந்நெடுமால் என நீ நினைந்தோ-என்னை அம்மாசுணப்பள்ளியிற் றங்கும் பங்கயம்
போலுங் கண்ணையுடைய அந்நெடியமாலென்று நீ நினைந்தோ; நெஞ்சத்தாமரையே இடம் ஆ இருக்கல் உற்றோ-நெடுமாலின்
மார்பினன்றித் தாமரையினுமிருத்தலான் யான் நீங்கினும் என்னெஞ்சமாகிய தாமரையே நினக்கிடமாக
இருக்க நினைந்தோ?, கூறுவாயாக எ-று.
மாசுணப்பள்ளி - மாசுணத்
தானியன்ற பள்ளியெனினுமமையும். என்னெஞ்சத் தாமரைக் கணிருக்கலுற்றோ வென்றதனான்,
|