13
பகற்
குறி
13.6. மருங்கணைதல்
மருங்கணைதல் என்பது உவந்துரைப்பக்
கேட்ட தலைமகள் பெருநாணினளாதலிற் கண்புதைத்து ஒருகொடியினொதுங்கி வருந்தாநிற்ப, சென்றுசார்தலாகாமையிற்றலைமகன்
அவ்வருத்தந் தணிப்பான்போன்று, முலையொடு முனிந்து அவளிறுமருங்கு றாங்கி யணையாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
121. தொத்தீன் மலர்ப்பொழில்
தில்லைத்தொல்
லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின்
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி
னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே.
121
______________________________________________________________
இப்பொழிற்கண் வந்து நின்றநிலை
ஒருஞான்றும் என்னெஞ்சினின்று நீங்காதென உவந்து கூறினானாம். கயிலைமட வாயென்றியைப்பினுமமையும்.
வான்பொழிலென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக் கண்டு தன் காதன் மிகுதியாற்றோன்றிய
பேருவகையை ஆற்றகில்லான் ஆற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம்.
120
13.6. வாணுதல் அரிவை நாணுதல்
கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.
இதன் பொருள்: தொத்து
ஈன் மலர்ப் பொழில் தில்லைத் தொல்லோன் அருள் என்ன முன்னி - கொத்துக்களையீனும் மலர்ப்
பொழில்களையுடைய தில்லையிற் றொல்லோனதருள்போல வந்தெதிர்ப்பட்டு; முத்து ஈன் குவளை மென்
காந்தளின் மூடி - கண்ணீர்த் துளியாகிய முத்தைவிடாநின்ற கண்ணாகிய குவளைகளைக் கையாகிய மெல்லிய
காந்தட்பூவான் மூடி; தன் ஏர் அளப்பாள் ஒத்து - அதனோடு சார்த்தித் தன்னெழிலை யளவிடுவாள்
போன்று; ஈர்ங்கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க - குளிர்ந்த கொடியின்கண் நாணி
மறைகின்றவளது மருங்குலடர்ப்புண்ண; பித்தீர் பணைமுலைகாள் - பித்தையுடையீர் பணைமுலைகாள்; இன்னும்
|