பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
286

13

 பகற் குறி

13.9 ஆயத்துய்த்தல்

   
ஆயத்துய்த்தல் என்பது மலரளிமேல்வைத்து மகிழ்வுற்றுப் பிரிய லுறாநின்ற தலைமகன், யாமித்தன்மையேமாதலின், நமக்குப் பிரிவில்லை, இனி யழகிய பொழிலிடத்து விளையாடும் ஆயம் பொலிவுபெறச் சென்று, அவரோடு சேர்ந்து விளையாடுவாயெனத் தலைமகளை யாயத்துச் செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-

124. கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
        பாசடை விண்மடுவில்
    எழுந்தார் மதிக்கம லம்மெழில்
        தந்தென இப்பிறப்பில்
    அழுந்தா வகையெனை ஆண்டவன்
        சிற்றம் பலமனையாய்
    செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
        சேர்க திருத்தகவே.

124

____________________________________________________________

13.9. கனைகடலன்ன கார்மயிற்கணத்துப்
      புனைமடமானைப் புகவிட்டது.

   
இதன் பொருள்: இப்பிறப்பில் அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் - இப்பிறவியின்கணழுந்தா வண்ணமென்னையடிமை கொண்டவனது சிற்றம்பலத்தை யொப்பாய்; கொழுந்தாரகை முகை கொண்டல் பாசடை விண் மடுவில் - கொழுவிய தாரகையாகிய முகையையுங் கொண்டலாகிய பசிய விலையையுமுடைய விண்ணாகிய மடுவின்கண்; எழுந்து ஆர் மதிக் கமலம் எழில் தந்தென - எழுந்து நிறைந்த மதியாகிய வெண்டாமரைப் பூத்தன தெழிலைப் புலப்படுத்தினாற்போல; செழுந் தாது அவிழ்பொழில் ஆயத்துத் திருத்தகச் சேர்க - வளவிய தாதவிழாநின்ற பொழிற்கண் விளையாடுகின்ற ஆயத்தின்கட் பொலிவு தக இனிச்சேர்வாயாக எ-று.

   
முகையோடு தாரகைக்கொத்தபண்பு வெண்மையும் வடிவும் பன்மையும். தாரகையோ டாயத்தார்க்கொத்தபண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு மதிக்கொத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலியும். மதியோடு