13
பகற்
குறி
13.10 தோழிவந்து கூடல்
தோழிவந்து கூடல் என்பது
தலைமகனைப் பிரிந்த தலைமகடானும் பூக்கொய்யாநின்றாளாகப் பிரிவாற்றாமையானும் பெருநாணினானுந்
தடுமாறி மொட்டுக்களைப் பறியாநிற்ப, யானின் குழற்காம் பூக்கொண்டு வந்தேன், நீ விரல்வருந்த
மொட்டுக்களைப் பறிக்கவேண்டாவெனத் தோழிவந்து கூடா நிற்றல். அதற்குச் செய்யுள்-
125. பொன்னனை யான்தில்லைப்
பொங்கர
வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள்மேவலர்
போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற் கேய்வனவே.
125
____________________________________________________________
தலைமகட்கொத்தபண்பு கட்கினிமையும்
சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறொத்தபண்பு வேறுபடுதலான் உவமைக் குவமை
யாகாமை யறிந்துகொள்க. கொண்டலம் பாசடையென்புழி அம்முச்சாரியை அல்வழிக்கண் வந்தது; அம்
- அழகெனினுமமையும். புனைமடமான்-கைபுனையப்பட்டமான். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: புறத்தாரறியாமைப்
பிரிதல்.
124.
13.10.
நெறியுறு குழலியை நின்றிடத்
துய்த்துப்
பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட்
குரைத்தது.
இதன் பொருள்: ஆய்
மறியே - அசைந்த மான்மறிபோல்வாய்; பொன் அனையான் - பொன்னையொப்பான்; தில்லைப்
பொங்கு அரவம் புன்சடை மிடைந்த மின் அனையான் - தில்லைக் கணுளனாகிய வெகுளாநின்ற வரவம்
புல்லிய சடைக்கண் மிடைந்த மின்னையொப்பான்; அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த -
அவனதருளைப் பொருந்தாதாரைப் போல மெல்லிய விரல்கள் வருந்த; மெல் நனை பறியேல் - மென்னனைகளைப்
பறியா தொழிவாயாக; மணம் தாழ் குழற்கு ஏய்வன வெறி ஆர் மலர்கள் இன்னன யான் கொணர்ந்தேன்-நின்மணந்தங்கிய
குழற்குப்
|