பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
288

13

 பகற் குறி

13.11 ஆடிடம் புகுதல்

   
ஆடிடம் புகுதல் என்பது கொய்துவந்த மலருங் குழற் கணிந்து, இனி நின்சிறுமருங்குல் வருந்தாமல் மெல்லச் செல்வாயாக வெனத் தோழி தலைமகளையுங்கொண்டு ஆடிடம் புகாநிற்றல். அதற்குச் செய்யுள்-

126. அறுகால் நிறைமல ரைம்பால்
        நிறையணிந் தேன் அணியார்
    துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
        லாயமெல் லப்புகுக

__________________________________________________________

பொருந்துவனவாகிய நறுநாற்றநிறைந்த மலர்களித்தன்மையனவற்றை யான் கொணர்ந்தேன் எ-று.

    மிடைந்த வென்னும் பெயரெச்சம் மின்னனையானென்று நிலப்பெயர் கொண்டது. அரவஞ்சடைமிடைதலை மின்மேலேற்றி, இல்பொருளுவமையாக வுரைப்பாருமுளர். இல்பொருளுவமையெனினும் அபூதவுவமையெனினு மொக்கும். இவள் மலரைப் பறியாமல் மொட்டைப் பறிப்பானே னென்பதுகடா. அதற்கு விடை: இவள் தலைமகனைப் பிரிந்து அப்பிரி வாற்றாமையானும், தலைமகன் புணர்ச்சிநீக்கத்துக்கட் டன்னைக் கோலஞ்செய்த அக்கோலத்தைத் தோழி காணாநின்றாளென்னும் பெருநாணினானும் ஆற்றாளாய், மலரைப் பறிக்கின்றவள் மயங்கி மொட்டைப் பறித்தாளெனவறிக. மெல்லிய மொட்டுக்களைப் பறியாதொழி, இத்தன்மைய நறுமலரை நின்குழற்கணிதற்கு யான்கொணர்ந்தேனென்பதனான், இவ்வொழுக்கம் யானறியப்பட்டது காணென்றுடம்பாடு கூறிய வாறாயிற்று. என்னனையாய் கொணர்ந்தேனென்பதூஉம் பாடம். நின்றிடத்துய்த்து-இடத்துய்த்து நீங்கிநின்று. பெயர்ந்து-மீண்டு சென்று.

125

13.11.  தனிவிளை யாடிய தாழ்குழற் றோழி
      பனிமதி நுதலியோ டாடிடம் படர்ந்தது.


   
இதன் பொருள்: என் சிரத்தின் உறுகால் பிறர்க்கு மிக அரியோன் புலியூர் அன்ன ஒண்ணுதலே-என்றலைக்கணுற்றகால் பிறர்க்கு மிகவரியவனது புலியூரை யொக்குமொண்ணுதலாய்; அணி ஆர் துறு கான் மலர்த் தொத்து-அழகார்ந்த நெருங்கிய நறுநாற்றத்தையுடைய