பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
309

13

பகற் குறி

13.27 இரக்கமுற்றுவரைவுகடாதல்

   
இரக்கமுற்று வரைவு கடாதல் என்பது வேங்கையொடு வெறுத்து வரைவுகடாயதோழி, யாமவனை யெதிர்ப்படலா மென்றின்புற்று வளர்த்த தினைத்திரள் இப்புனத்தின்கணில்லா வாயிருந்தன; இனி நாமவனை யெதிர்ப்படுமாறென்னோவெனச் சிறைப்புறமாகத் தலைமகனுக்கிரக்கமுற்று வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்-

142. வழுவா இயலெம் மலையர்
        விதைப்பமற் றியாம்வளர்த்த
    கொழுவார் தினையின் குழாங்களெல்
        லாமெங் குழாம்வணங்குஞ்
    செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
        பலவரைச் சென்றுநின்று
    தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
        தாவதித் தொல்புனத்தே.

142

__________________________________________________

13.27.  செழுமலை நாடற்குக்
      கழுமலுற் றிரங்கியது.

   
இதன் பொருள்: வழுவா இயல் எம் மலையர் விதைப்ப-விதைக்கும் பருவத்துங் கொய்யும்பருவத்தும் வழுவாது செய்யுமியல்பையுடைய எந்தமராகிய மலையர் விதைப்ப; யாம் வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல்லாம்-யாம்வளர்த்த கொழுவிய நெடிய தினையின் திரட்களெல்லாம்; எம் குழாம் வணங்கும் செழுவார் கழல் தில்லைச் சிற்றம்பலவரை-எமது குழாஞ்சென்று வணங்கும் வளவிய நெடிய கழலையுடைய தில்லையிற் சிற்றம்பலத்தையுடையானை; சென்று நின்று தொழுவார் வினை நிற்கிலே-சென்று நின்று தொழுவாருடைய வினை அவர்கண் நிற்கிலே; இத்தொல் புனத்து நிற்பது ஆவது-இப்பழைய புனத்தினிற்ப தாவது; இனிநில்லா எ-று.

   
குழாங்களெல்லா நிற்பதாவதெனக்கூட்டுக. நிற்பதென்பது நிற்றலென்னும் பொருட்டு. நிற்பதாவவென்பது பாடமாயின், ஆவவென்பதிரங்கற் குறிப்பாக வுரைக்க, நிற்பவென்பதூஉம் பாடம். குழுவார்தினையென்பதூஉம் பாடம்.

142