13
பகற்
குறி
13.30 மயிலொடு கூறி
வரைவுகடாதல்
மயிலொடு கூறி வரைவுகடாதல் என்பது
பிரிவருமைகூறி வரைவுகடாய தோழி, பிரிவாற்றாமையோடு தலைமகளையுங் கொண்டு புனங்காவலேறிப்
போகாநின்றாள், கணியார்நினைவு இன்றுமுடிந்தது; யாங்கள் போகாநின்றோம்; இப்புனத்தொருவர்
வந்தால் இங்கு நின்றும் போனவர்கள் துணியாதன துணிந்து போனாரென்று அவர்க்குச் சொல்லுமினென
மயிலொடுகூறி வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்-
145. கணியார் கருத்தின்று
முற்றிற்
றியாஞ்சென்றுங்
கார்ப்புனமே
மணியார் பொழில்காண்
மறத்திர்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
_____________________________________________________________
மறைப்புறமாயிற்று. சிறைப்பட
வுரைத்த தென்பது பாடமாயின், சிறைக்கண்வந்து நிற்பவென்றுரைக்க.
144
13.30. நீங்கரும் புனம்விடு நீள்பெருந்
துயரம்
பாங்கி பகர்ந்து பருவர
லுற்றது.
இதன் பொருள்: கணியார்
கருத்து இன்று முற்றிற்று-கணியாரது நினைவு இன்று முடிந்தது; யாம் சென்றும் - யாங்கள் போகா நின்றேம்;
கார்ப் புனமே-கரியபுனமே; மணி ஆர் பொழில்காள் - மணிகளார்ந்த பொழில்காள்; மறத்திர் கண்டீர்-வேங்கையொடு
பயின்றீராகலின் நீரெம்மைமறப்பீர்; மன்னும் அம்பலத்தோன் அணி ஆர் கயிலை மயில்காள் - நிலைபெறு
மம்பலத்தையுடையவனது அழகார்ந்த கயிலையினின்றும் வந்த மயில்காள்; அயில் வேல் ஒருவர் வந்தால்-அயில்
வேல் துணையாகத் தனிவருமவர் ஈண்டுவந்தால்; துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள்
சொல்லுமின்-அன்புடையார் துணியாதனவற்றை அவர் துணிந்தாரென்னு நீர்மைகளையவர்க்குச்
சொல்லுமின் எ-று.
நீர்மை ஈண்டு வியப்பு. நீரிவ்வாறு
சொன்னால் அவராற்று வாரென்பது கருத்து. பேரருளி னோன் கயிலையினுள்ளீராகலின் நீர் கண்ணோட்ட
முடையீரென்பது கருத்து. கார்ப்புனமென்பதற்குக் கார் காலத்துப் பொலியும் புனமெனினுமமையும். துணியாதனவாவன
பிரிதலும் வரையுந் துணையு மாற்றியிருத்தலும். புனமே பொழில்காள்
|