பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
318

New Page 1

இரவுக் குறி

    பொருந்தின மேகம் புதைந்திருள்
        தூங்கும் புனையிறும்பின்
    விருந்தினன் யானுங்கள் சீறூ
        ரதனுக்கு வெள்வளையே.

148

14.2 வழியருமைகூறிமறுத்தல்

   
வழியருமை கூறி மறுத்தல் என்பது தலைமகனிரவுக்குறி வேண்டிநிற்ப, யாங்கள் வாழும்பதி ஏற்றிழிவுடைத்தாகலின் அவ்விடத்து நினக்குச் சிந்தைக்கு மேறற்கரிதெனத் தோழி வழியருமைகூறி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

149. விசும்பினுக் கேணி நெறியன்ன
        சின்னெறி மேன்மழைதூங்
    கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
        தாலொக்கும் ஐயமெய்யே

_____________________________________________________________

சுவையானமிர்தமுமாயிருந்தவரது குன்றினெனக் கூட்டுக.

    மேகம் வந்து பொருந்தின வென்றதனால், தன்னூர்க்குப் போதலருமை கூறுவான்போன்று இரவுக்குறி மாட்சிமைப்படு மென்றானாம். இருடூங்கும் புனையிறும்பு என்றதனால், யாவருங் காணாராகலி னாண்டுவந்து நிற்கின்றேனென்றானாம். மாலை விருந்தினரை மாற்றுதலறனன்றென்பது தோன்ற விருந்தினனென்றான். குன்றினின்றேங்கு மருவியேர்திகழச்சென்று பொருந்தின மேகமென்க. அருவியேர்பெற மேகம்பொருந்தினவூர் நின்னூராகலான் என்னி னைப்பற்று யானுமேர்பெற நின்னைவந்து சேர்ந்தே னென்பது  போதரும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இரவுக்குறி நேர்வித்தல்.

148

14.2.  இரவர லேந்தல் கருதி யுரைப்பப்
      பருவரற் பாங்கி யருமை யுரைத்தது.


   
இதன் பொருள்: ஐய - ஐயனே; விசும்பினுக்கு ஏணி நெறி அன்னசின்னெறிமேல் - விசும்பிற் கிட்டதோ ரேணிநெறி போலுஞ் சிறுநெறிமேல்; மழை தூங்கு அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் - மழை யிடையறாது நிற்றலான் இடையிடையுண்டாகிய