உய
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்
ஆசியுரை
உயிரென வியத்தல்:
தலைவன் தான் முன்னாளில் தலைவியை
எதிர்ப்பட்ட பொழிலை அடைந்து அங்கு நின்ற தலைவியைக்கண்டு என் உயிர் இதோ நிற்கிறது என
வியந்துகூறல்.
நேயத்ததாய் நென்னல் என்னைப்புணர்ந்து
நெஞ்சம் நெகப்போய்
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய்
அரன்அம்பலம் போல்
தேயத்ததாய் என்றன் சிந்தையதாய்த்
தெரியிற் பெரிதும்
மாயத்ததாகி இதோவந்து நின்றதென்
மன்னுயிரே.
(தி.8 கோவை பா. 39)
நேற்று என்பால் அன்பு செய்து கூடிப்பின்நேயம்
இல்லதுபோல் என்னை நீங்கி ஆயத்தினரிடையே கூடி, இன்பம் செய்தலின் அமிழ்தாய் துன்பம்
தருதலின் அணங்காய் அரன் அம்பலம் போலத் தோற்றப்பொலிவுடையதாய், புலப்படாமல் என்சிந்தையின்
கண்ணதாய் மாயம் செய்யும் என் உயிர் இதோ வந்து நின்றது என்பது இப்பாடலின் பொருளாகும்.
உலகியல் நிலையில் தலைவன் தலைவியைத்
தன் உயிராகக் கண்டு வியந்து கூறுவதாக அமைந்த இப்பாடல் திருவாதவூரடிகள் திருப்பெருந்துறையில்
தமக்குக் குருவாக வெளிப்பட்டு அருள் செய்து மறைந்தருளிய அற்புத நிகழ்ச்சியை நினைந்துபோற்றும்
நிலையில் அமைந்திருக்கக் காணலாம்.
திருமால் வரங்கிடத்தல்:
தில்லையம்பலவன் வாயிலில் திருமால்
கோயில் இருத்தலைகக் காணலாம். மணிவாசகர் திருமால் கிடந்த நிலையில் விளங்கற்குக் கற்பனையான
காரணம் ஒன்றைப் படைத்து மொழிகின்றார். மாயவனாகிய திருமால் முப்புரங்களை வென்ற சிவபெருமானுடைய
திருவடிகள் இரண்டையும் காணவேண்டி நிலத்தைப் பிளந்து சென்று காணாது அப்பெருமானையே இரங்கிடு என
வேண்ட தன்னை வணங்க இரண்டு கரங்களைத் தந்த இறைவன் மேலும் சிறிது திருவுளம் இரங்கி, தில்லையில்
தூக்கிய ஒரு திருவடியைக் காட்டினானாக மற்றொரு திருவடியையும் காட்டியருள வேண்டுமென அத்தில்லையம்பல
வாயிலிலேயே மாயவன் வரங்கிடக்கிறான் எனக்கூறும் கோவையார்ப் பாடல் இது.
புரங்கடந்தான்அடி காண்பான்
புவிவிண்டு புக்கறியாது
இரங்கிடுஎந்தாய் என்றிரப்பத்தன்
ஈரடிக்கென் இரண்டு
|