பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
321

14

இரவுக் குறி

14.4 இரவுக்குறிநேர்தல்

   
இரவுக்குறி நேர்தல் என்பது தலைமக னெஞ்சுடைந்து வருந்தாநிற்பக் கண்டு, இவனிறந்துபடவுங் கூடுமென வுட்கொண்டு, நீ யாளிக ணிரைத்துநின் றியானைகளைத்தேடு மிராவழியின் கண்வந்து மீள்வேனென்னாநின்றாய்; இதற்குத் தீவினையேன் சொல்லுவதெவனோ வென்று மறுத்த வாய் பாட்டாற் றோழி யிரவுக்குறி நேராநிற்றல். அதற்குச் செய்யுள்-

151. கூளி நிரைக்கநின் றம்பலத்
        தாடி குரைகழற்கீழ்த்
    தூளி நிரைத்த சுடர்முடி
        யோயிவள் தோள்நசையால்
    ஆளி நிரைத்தட லானைகள்
        தேரு மிரவில்வந்து
    மீளியுரைத்தி வினையே
        னுரைப்பதென் மெல்லியற்கே.

151

______________________________________________________________

யானாற்றேனென்றான். நீங்கி விலங்காது - நீங்கியுள்ளஞ் செல்கின்ற செலவினின்றும் விலங்காது. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: இரவுக்குறி நயப்பித்தல்.

150

14.4.  தடவரை நாடன் தளர்வு தீர
      மடநடைப் பாங்கி வகுத்து ரைத்தது.


   
இதன் பொருள்: கூளி நிரைக்க நின்று - கூத்தின்கட் சுவையாற் பேய்களும் போகாது நிரைத்துநிற்ப நின்று; அம்பலத்து ஆடி குரை கழற்கீழ்த் தூளி நிரைத்த சுடர் முடியோய் - அம்பலத்தி்ன் கணாடுவானது ஒலிக்குங் கழலையுடைய திருவடிக்கணுண்டாகிய தூளிமொய்த்த சுடர்முடியையுடையோய்; இவள் தோள்நசையால் - இவடோண்மேலுண்டாகிய விருப்பினால்; ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து மீளி உரைத்தி - ஆளிகள் ஊடுபோக்கற நிரைத்து வலியையுடைய யானைகளைத் தேடு மிரவின்கண்வந்து மீளுதலைச் சொல்லாநின்றாய்; மெல்லியற்கு வினையேன் உரைப்பது என் - இனி மெல்லியற்குத் தீவினையேன் சொல்லுவதென்? உடன்படுவாயென்பேனோ மறுப்பாயென்பேனோ? எ-று.