பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
322

14

இரவுக் குறி

14.5 உட்கொளவினாதல்

   
உட்கொள வினாதல் என்பது இரவுக்குறிநேர்ந்த தோழி, தங்கணிலத்து மக்கள் கோலத்தனாய் வருவதற்கு அவனுட் கொள்வது காரணமாக, நின்னூரிடத்தார் எம்மலர்சூடி எச்சாந்தணிந்து எம்மர நிழலின்கீழ் விளையாடுபவெனத் தலைமகனை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்-

152. வரையன் றொருகா லிருகால்
        வளைய நிமிர்த்துவட்கார்
    நிரையன் றழலெழ வெய்துநின்
        றோன்தில்லை யன்னநின்னூர்

__________________________________________________

இரவுக்குறியுடம்பட்டாளாகலின், தூளிநிரைத்த சுடர் முடியோ யென்றதனால், அரையிருளின்வருதலான் வருமேதத்தை அத்தூளி காக்குமென்று கூறினாளாம். குரைகழல்: அன்மொழிதொகை. மருடல் வெகுட லென்ப மருளி வெகுளி யென நின்றாற்போல, மீடலென்பது மீளியென நின்றது. வந்து மீளியென்பதற்கு, வந்து மீடலையுடைய இரவுக் குறி என்றுரைப்பாருமுளர். உடம்படவு மறுக்கவுமாட்டாதிடைநின்று வருந்துதலின் வினையேனென்றாள். ஆளி நிரைக்குமாற்றின்கண் நீ வருதற்குடம் படுதற்காகாதாயினுந் தோணசையாற் கூறுகின்ற விதனை மறுப்பின் நீ யாற்றாயென்பதனாலுடம்படாநின்றேனென்பது படக் கூறினமை யால், வகுத்துரைத்த லாயிற்று. மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறிநேர்தல். இறந்தகால வுட்கோள்: குறிப்பு நுட்பம். 151

14.5.  நெறிவிலக் குற்றவ னுறுதுயர் நோக்கி
      யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.

இதன் பொருள்: சிலம்பா - சிலம்பா; நின் ஊர் நலம் பாவி ஒளிர்வன விரை என்ன - நின்னூரின் நலம்பரந்து விளங்குவன வாகிய ஆண்டையார் பூசும் விரையெத்தன்மைய; மென்னிழல் என்ன - அவர் விளையாடு மெல்லிய நிழலெத்தன்மைய; வெறி உறுதாது இவர்போது என்ன - அவர்சூடு நறுநாற்றம் பொருந்திய தாதுபரந்த போதுகளெத்தன்மைய; உரை -உரைப்பாயாக எ-று.

   
அன்று ஒருகால் வரை இருகால் வளைய நிமிர்த்து - அன்றொருகால் வரையை யிரண்டுகாலும் வளையும்வண்ண